அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க வந்த முஹம்மது யூசுப் கானை முஸ்லிம் பெயரில் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்றெண்ணி திலீப்குமார் என்ற இந்து பெயரை சினிமாவுக்காக தேர்ந்தெடுத்தவர் அதன் டைரக்டர்.
தன்னுடைய இந்துப் பெற்றோர்களால் திலீப்குமார் என்ற பெயரிடப்பட்ட அல்லா ரஹ் ரஹ்மான் இன்று உலகமெங்கும் இசைக் கலாச்சாரத்திற்கு இந்தியாவின் அடையாளமாகியிருக்கிறார்.
கடந்த எம்பத்தியொரு ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் இந்திய படைப்பாளிகளில் சத்யஜித்ரே மற்றும் பானு அத்தல்லாவுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆஸ்கார் கமிட்டி நடுவர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடிஇ பம்பாயில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் இவற்றின் தாக்கத்தை தங்களுடைய முடிவுகளில் சீலிட்டு அறிவித்துவிட்டார்கள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. தேர்ந்த ரசிகர்கள் “ஸ்லம் டாக் மில்லினர்” படத்தை பார்த்துவிட்டு இந்த எண்ணங்களுக்கு உடன்படத் தயாராக இல்லை.
படம் தயாரிக்கப்பட்ட செலவில் சுமார் பத்துமடங்கு பரிசாக 230மில்லியன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் மற்றும் அதில் நடித்த கலைஞர்களுக்கு இந்தியாவில் மேலும் பரிகள் காத்திருக்கின்றன. இவ்வாறாக தெரிந்த செய்திகள் பல இருந்தாலும் ஆஸ்கார் இந்தியாவில் ஏற்படுத்திய அலைகள் ஏராளாம்.
பரிசுபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சசூல் பூக்குட்டி தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டில் தடம் பதித்தவர்கள். மேற்கத்திய நாடுகள் இந்தியாவிற்கு வழங்காத அங்கீகாரத்தை இவர்கள் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.
பல காயங்களையும் மௌனத்தையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் இந்தியர்கள் இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு நீண்ட தூரம் பயணித்து வந்திருக்கிறார்கள்.
தென்கிழக்காசிய செய்தியாளர்கள் ரவிவெல்லூர் சொல்கிறார் 1927ல் அநேகமாக முதல் ஆஸ்கார் வழங்கப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்க எழுத்தாளர் காதரினா மேயோ மதர் இந்தியா என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இந்தியர்களின் பால்ய விவாகத்தையும் விதவைகள் நிலைமையும் கடுமையாக சாடிய புத்தகம் அது.
அந்த காதரினா மேயோ தான் ஆசிய இனத்தவர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடைவிதிக்கும் சட்டத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்தவர் மகாத்மா இவருடைய புத்தகத்தை சாக்கடை இன்ஸ்பெக்டர் என்று வர்ணித்தார். ஆசியஇனத்தவருக்கு அமெரிக்காவில் உள்ள இன்றைய இடம் இன்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
“ஸ்லம் டாக் மில்லினர்” படத்தை நீங்கள் பார்த்திருந்தால் ரஹ்மான் பாடலும் ஆலிச் சேர்ப்பும் தேடிப் பிடித்தால்தான் காணக் கிடைக்கும் படத்தின் ஜீவனோடு தன்னுடைய இசையை இழைய விட்டிருக்கிறார். 1992ல் பம்பாயில் நடந்த கலவரத்தைக் கூட படம் தொட்டுக் காட்டியிருக்கிறது ஆனால் காயங்களுக்கு மருந்தளிக்கும் தன்மையாகத்தான் இந்தப் படத்தில் அவைகள் கையாளப்பட்டுள்ளது.
எழுத்தாளார் ஜெயமோகன் கூறுவார் இப்படி “சிங்கம் காட்டுக்கு ராஜாவாக தானாகவா முடிசூட்டிக் கொண்டது” என்று மெட்ராஸ் மொசார்ட் என்று வர்ணிக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்து மதத்திலிருந்து மதம் மாறி இப்போது தான் ஏற்றுக்கொண்ட மதத்தில் தீவிரப் பற்றாளர். ஏதிரெதிர் அணிகளில் வசைபாடிக்கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்து ஊடகங்களில் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விடுமோ என்று தங்கள் வாழ்த்து செய்திகளை இரண்டு தவணைகளாக அனுப்பிக் கொண்டிருந்ததாக செய்திகள் வந்தன.
இந்தியாவில் வாழும் 140 மில்லியன் இஸ்லாமிய மக்களுக்கு ஆஸ்கார் விருது நல்ல செய்தியோ இல்லையோ இந்திய கலைஞர்களுக்கு வாசல் திறந்திருக்கிறது என்ற உலக நாயகன் கமலும் மற்ற கலைஞர்களும் சிங்கப்பூரின் 96.8 ஒலி அலையில் ஒரே சுருதியில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
“ஸ்லம்டாக் மில்லினர்” படத்தில் வரும் சிறுவர்களை பிச்சை எடுக்க வைக்கக் கண்ணைத் தோண்டிக் கோரப்படுத்தும் காட்சிகள் வெறும் சினிமாத்தனம் அல்ல உண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யதார்த்தம்.
ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் பேசமாட்டார்இ நடிகர் பார்த்திபன் ஏன் அப்படி? என்று கேட்டாராம் பேசிவிட்டால் இவ்வளவுதான் இவரிடம் சரக்கு என்று நினைத்து விடுவார்கள் என்று சொன்னாராம்.
ஆஸ்கார் விருது பேசாத விடியல்களையும் பேசவைக்கும் என்று நம்புவோம் இவ்வருட ஆஸ்காருக்கு நாமும் ஜெய் ஹோ போடுவோம்.
நன்றி: நாம் காலாண்டிதழ்