ஜூலை, 2011 க்கான தொகுப்பு

 

எல்லோருமே
பிள்ளையார் ஆகிவிட்டோம்
உலகமே எலி வாகனத்தில் பயணிக்கிறது
சிவ பார்வதியைச் சுற்றிய
பிள்ளையாராக
வாமண வாரிசுகள்
ஒரடிப் பெட்டிக்குள்
உலகைச் சுற்றுகிறார்கள்
கால்களைக் கழற்றிவிட்டு
கைவிரல்களால்
ஊழித் தாண்டவம் ஆடுகிறோம்
அரூபச் சிலந்தி வலையை
எலியாய்ப் பிறாண்டிப்
பிராண்டி
பிரபஞ்சம் தாண்டிதேடுகிறோம்
எலிக்கு மனித வாகனம்
இருபத்தொன்றில் வாழ்க எலி சாம்ராஜ்யம்
எலிமயமான எதிர்காலம்

இப்போது நான்காம் தலைமுறை மொபைல் வலையமைப்புத் தொழில்நுட்ப சேவை சிங்கப்பூரில் அறிமுகம் கண்டுவிட்டது. ஒரு விநாடிக்கு 75 மெகாபைட் தரவிறக்க வேகத்திலும் 37.5 தரவேற்ற வேகத்திலும் இனி எகிரலாம்.

வலைத்தளத்தில் எத்தனை கனமான விஷயங்கள் உள்ளன. எத்தனை ஆர்வமூட்டும் விஷயங்கள் உள்ளன. அரசியல், சினிமா, இலக்கியம், ஆன்மீகம், சமூக ஆராய்ச்சிகள், விவாதங்கள் இப்படி. ஆனால், இவற்றையெல்லாம் விட்டு விட்டுக் கோழிச் சண்டை பார்க்கும் குதூகலம்தான் தூக்கலாக இருக்கிறது. கருத்துகள், விழுமியங்களைப் பற்றிக் கவலைகள் எதுவுமில்லை. மாறி மாறி கமெண்ட்ஸ் கொடுத்துக் கொண்டிருப்பது. சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும் என்று பெர்டினாட் ரஸ்ஸல் சொன்ன தத்துவத்தை மேற்கோள்காட்டி ஓர் இணையப் பட்சி சொல்கிறது. 1001 gadgets, gizmes, Duds, game consoles, computers, mobile phones, MP3, electronic book reader இவற்றை வைத்துக் கொண்டு நாம் வெறுமனே இருப்பதை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த வெற்றிடம் மறையவே மறையாது. இன்னும் அதிகமாக அதைப் பற்றிய கவலைகள்தான் மிஞ்சும் என்கிறார்கள். இதையெல்லாம் மிஞ்சும் ஒரு நண்பர் ஐ போனில் தினமும் கைரேகை, ஜாதகம், கிளிஷோசியம் என்று அறிவியல் ரீதியில் அஸ்திவாரமில்லாமல் போன விஷயங்களை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் தேடிக் கொண்டிருப்பார். அது கூட பரவாயில்லை. இணையத்தில் cizy cot, Netizenபார்த்துவிட்டு online consultants மூலம் முகவரி வாங்கி வாட்டர்லூ ஸ்தீரிட் போக ஆரம்பித்தார். அங்கு Classic fengsuiல் அரைமணி நேரத்திற்கு மூன்று வெள்ளியில் நடந்தது நடக்கப் போவது என்று அனைத்தையும் சொல்லிவிடுகிறார்கள் என்கிறார். சிலருக்கு வருடத்தில் பாதி நாட்கள் வருங்காலத்தை கணிப்பதிலும் மீதி தூக்கத்திலும் கழிந்துவிடுகின்றன.

பொதுவாக 30 வயதுக்குள் இருக்கும் நபர்கள்தான் அதிகமாக ஜோஸ்யம் பார்ப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் முக்கியமாக வருங்காலம், காதல் இரண்டிலும் செல்ல வேண்டிய பாதை ஒரு புள்ளியில் அவர்களைத் திகைக்க வைத்துவிடுவதும், உலகில் திடீர் திடீரென்று நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அவர்களை ஜோஸ்யம் பார்க்கத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள்.

அருணகிரிநாதர் ‘‘நாள் என்ன செய்யும், வினைதான் என்ன செய்யும் என்னை நாடி வந்த கோல் என்ன செய்யும்’’ என்று பாடிய பாட்டுத்தான் எனக்கு அந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.

மெரினா பே சென்ஸ், சந்தோஷா, பேர்ட் பார்க் என்று இணையத்தில் தேடித் தேடி இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்பும்போது ஒரு நண்பர் கேட்டார். இங்குக் குரங்குக் குட்டியை கிடுக்கிப் பிடி போட்டு உயிரோடு கட்டி வைத்துத் தலையை மட்டும் இளநீர் மாதிரி சீவி வைத்துக்கொண்டு மூளையை மட்டும் உறிஞ்சும் இடம் கிளார்க் தீயில் இருக்கிறதாமே அங்குப் போவோமா என்றார். இங்கு அப்படியெல்லாம் விருந்து ஒன்றுமில்லை. குரங்கோடு வேண்டுமானால் உட்கார்ந்து போட்டோ எடுத்து விலங்குப் பண்ணையில் விருந்து சாப்பிடலாம். நைட் சஃபாரி சென்று வாருங்கள் என்றேன்.சைனா, தைவான், ஹாங்காங், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் Rhino கொம்பு, Tiger penis, Deer penis, pig Brains குரங்கு மூளை என்று சாப்பிடும் பழக்கத்தை வலைத்தளத்தில் பார்த்துவிட்டு அந்த நாட்டவர்களெல்லாம் இங்கிருப்பதால் சிங்கப்பூரிலும் அவை கிடைக்கும் என்று அவருக்கு நினைப்பு.

ஆப்பிரிக்கர்கள் கொரில்லாவைச் சாப்பிடுவார்கள். மலேசியா, இந்தோஷேனியாவில் ஒராங் உட்டான் சாப்பிடுவார்கள். இவையெல்லாம் நான் கேள்விப்பட்டதுதான். சீனாவில் பல இடங்களில் தெருக்களில் நாய்க்குட்டிகளை உயிரோடு சுடுநீரில் போட்டுக் கொதிக்க வைப்பதை இணையத்தில் வெளியிட்டு உணர்வுகளைக் கொதிக்க வைத்துவிட்டார்கள். 2003ல் சிங்கப்பூரில் சார்ஸ் நோய் பரவியதற்குக் காரணம் சீனாவில் Guangdong மாநிலத்திலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த விமானத்தின் வழி ஒரு விமானப் பணிப்பெண் மூலம் சிங்கப்பூரை வந்தடைந்தது என்று சொல்வார்கள். அப்போது பூனை, நாய்களைக் கொல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலக்கட்டத்தில் சுமார் 6 மில்லியன் வெள்ளி (culling bill) செலவழிக்கப்பட்டது. இப்போது பூனைகளைக் கொல்லாதீர்கள் இயக்கம் இணையம் மூலமே ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலில் Chong pong தொகுதியில் பூனைகளைக் கொல்லாமல் இனவிருத்திக் கட்டுப்பாடு செய்யும் ஏற்பாடு வெளியுறவுத் துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்களால் இம்மாதம் தொடங்கப்பட்டது. சென்ற மாதம் ஜீரோங் ஈஸ்ட்டில் ‘‘நாய்கறி விற்கப்படும்’’ என்று விளம்பரப் பலகையில் ‘song Aua Jiang” உணவுக் கடையில் விளம்பரம் செய்து தர யாரோ ஒரு புண்ணியவான் முகப்பக்கத்தில் அப்லோட் செய்துவிட்டார்.

அதெல்லாம் ஒன்றுமில்லை ஒரு விளம்பரத்திற்காக அப்படிச் செய்துவிட்டேன். ‘‘சீனத்தில்’’ saigourouஎன்றார் அதன் உரிமையாளர்.AVA அப்படியென்றால் அது என்ன கறி என்று சோதிக்க பரிசோதனைக் கூட்டம் சென்றது உரிமையாளர் அபராதம் 10 ஆயிரம் வெள்ளி 12 மாதங்கள் சிறையிலிருந்து தப்பினார். அது வெறும் பன்றிக் கறி என்று தெரியவந்தது. முகப்பக்கதில் ‘‘அது என்ன வெறும் பன்றிக் கறி’’ நாயை விட நாம் என்ன மட்டமா என்று பன்றி ஃபீல் பண்ணுவதை யாருமே கண்டு கொள்ளவில்லை என்று Comments வந்தது.

மிருகங்களுக்குப் பசி எடுக்கும்போது நம்மைக் குதறுவது இயற்கை. ஆனால் நாம் ஏன் அதைக் குதறவேண்டும் என்று 1800களில் மிருக வதைத் தடுப்புச் சட்டம்  கொண்டுவருவதற்கு‘‘Mr uptonsinclair” எழுதிய The Jungle என்ற நாவல்தான் தூண்டுகோலாக அமைந்தது. ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் நடக்கும் மிருக வதைகளை Meet your meat.com ல் பாருங்கள். அமெரிக்காவில் நாய்களைக் கொல்லக்கூடாது என்று சட்டமிருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் நாய் உணவுகள் சீனாவில் நாய்களைக் கொல்கின்றன என்கிறார்கள்.

முகப்பக்கத்தை உருவாக்கிய Mark Zuckerburg அசைவ உணவைக் குறைத்துக் கொள்வதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன். அசைவ உணவு சாப்பிட வேண்டுமெனில் என் கையாலேயே அதைக் கொல்லவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக Face bookல் வெளியிட்டார். அத்துடன் முதன்முதலில் ஒரு லாப்ஸ்டரைச் சுடு தண்ணீரில் அமுக்கிக் கொன்று சாப்பிட்டதாச் சொல்ல Face bookல்  கமென்ட்ங்கள் இப்படியே சொல்ல ஆரம்பித்தால், தினமும் எதையாவது கொல்ல வேண்டும் என்று ஆசை வந்துவிடும் என்றது. எனக்கும் ஒரு Comments போடவேண்டும் என்று ஆசைவந்தது. கொல்வதற்கு முன்பு கொஞ்சம் அவற்றோடு பழகி அதற்குப் பிறகு நாம் அவைகளை சாப்பிட நினைப்பது அவற்றுக்குச் சம்மதம்தானா என்று ஒருவருக்கொருவர் ஒரு தீர்மானத்திற்கு வந்த பிறகு கொல்லலாம். அதாவது ‘‘பழகிக் கொல்லலாம்’’. ஆனால், நான் Comments போடவில்லை. 

‘‘மிருகங்கள்தான் மிருகங்களைக் கொல்கின்றன. ஏனெனில், அவற்றிற்கு வேறு வழியில்லை. நமக்கு ஏகப்பட்ட மாற்று வழிகள் உள்ளன’’ comments I like it. போனவாரம் Face book ஒரு சுவரஸ்யம். 23 வயது Mr Joel Ling எம் ஆர்டியில் ரிசர்வ்டு சீட்டில் 63 வயது Josanwangஎன்பவருக்க் இடம் கொடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததை பேஸ் புக்கில் Josonபடம் போட்டுவிட்டார். ஒரே நேரத்தில் 400 comments Joel ling மன்னிப்புக் கேட்டார். மருந்து சாப்பிட்டுவிட்டு இரயிலில் ஏறிவிட்டேன். மயக்கமாக இருந்தது. அப்படி நடக்கும் ஆள் நான் இல்லை என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எனக்குச் சில வருடங்களுக்கு முன்னால் அமரர் Sujathaசிலாகித்த ஹைக்கூ ஞாபகம் வருகின்றது. என்னருகில் அமர்ந்திருப்பவர் எழுந்திருக்கிறவராய்த் தெரியவில்லை . கர்ப்பிணி நிற்கிறாள்.

டெய்ல் பீஸ்

சிங்கப்பூரில் ‘இரகசிய விருந்து’ என்ற தலைப்பில் ஒரு செய்தி இணையத்தில் படித்திருப்பீர்கள். அது ஜப்பானில் பின்பற்றப்படும் ‘‘nyotaimori” சூஸிக் கஞ்சியை நிர்வாணமாகப் படுத்திருக்கும் பெண் மீது வைத்து சாப்பிடும் முறை.

அதில் உணவு சாப்பிடுவதின் ஆனந்த நிலை ஏற்படுவதாக Dr Kcra (NUS) சொல்கிறார். சிங்கப்பூரில் இது இருப்பது இது நாள் வரை தெரியவில்லை. தெரிந்தாலும் நாம் பார்க்கமுடியாது. ஏனெனில் அது private.

what ought to be public and what ought to be private.

thanks:http://thangameen.com/ContentDetails.aspx?tid=396

 

 

 

 

 

 

மலேசியாவில் ‘‘Obedient wives club” தொடங்கப்பட்டிருக்கும் செய்தி பலரைப் போலவே எனக்கும் வியப்பளித்தது. சென்றவாரம் சிங்கப்பூரிலும் அதன் கிளை தொடங்கப்படும் என்று டாக்டர் Dalan zaini  என்பவர் ஹமிதா, அஜிமின் இருவருடன் பேட்டி அளித்திருந்தார். கீழ்படியும் மனைவிகள் சங்கத்தின் முக்கிய கொள்கைப் பிரகடனம், சமுதாயத்தின் ஒட்டுமொத்த சீரழிவுக்கு முழுமுதற்காரணம். பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் பணிவாக நடந்து கொள்ளாதது, குடும்பத்தில் கணவனிடம் முதல் தர விபச்சாரியாக மனைவிகள் நடந்துகொண்டால் சமூகத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பதைப் பேட்டி காணும் அனைத்துப் பத்திரிகைகளிலும், ரேடியோ, தொலைக்காட்சி நேர்காணல்களிலும் தொடர்ந்து சொன்னார்கள்.

1968ல் அஸாரி முஹம்மது என்பவர் தினமும் தான் இறைத்தூதர் நபிகளைச் சந்திப்பதாகவும் இமாம் மஹதி விரைவில் தன் மறைவிடத்திலிருந்து தோன்றி உலகில் மறுமலர்ச்சியைக் கொண்டு வரப்போவதாகவும் பெண்கள் தங்களுடைய பணிவிடையை மேன்மைப்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை உயர்த்தவேண்டும் என்றும் ஆண்களிடம் மஹர் பெறுவதின் மூலம் பெண்களின் உரிமை முழுவதும் ஆண்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதை மீறினால் mushuz (Rebellion)  மலக்குகளின் கோபப்பார்வை குடும்பத்தைத் தாக்கும் என்றும் பிரகடனப்படுத்தி 1980&90களில் மலேசியாவில் சுமார் 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 2009ல் இவரது மனைவிகளில் ஒருவர் பலதாரம் புரிவோர் (Poly gamy club)சங்கத்தை ஏற்படுத்தினார். சென்றவருடம் தனது 73வது வயதில் இவர் இறக்கும்போது பல மனைவிகள், 40 குழந்தைகள் 200 பேரக் குழந்தைகள் இருந்தனர், அத்தோடு அவருக்கு 300 மில்லியன் சொத்தும் இருந்ததாம். இவர் சிங்கப்பூருக்குள் நுழைய தடை இருந்தது. 28 மில்லியன் மலாய் மக்களின் இந்த Gobel Ikhwan அமைப்பின் உதவி தலைவி ரொஹையா கீழ்படியும் மனைவிகள் உலக நன்மையைக் கையிலெடுக்கிறார்கள். விவாகரத்து, குடும்ப வன்முறை, விபச்சாரம் என்ற பேச்சுக்கே இனிமேல் இடமிருக்காது என்றும் கணவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வகுப்புக்களை மலேசியாவெங்கும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் சொல்கிறார். சிங்கப்பூரில் கிளை ஆரம்பிக்கவிருக்கும் டாக்டர் Darlan கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடப்பது இலதா Ibadah (Blessed derd in Islam) என்கிறார். கணவன் விரும்பினால் மனைவி உடலுறவை மறுக்கக்கூடாது. அது அவர்களுடைய உரிமை அல்ல என்றும் கூறுகிறார். கோலாலம்பூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த சங்கம் ஜோர்டான், இந்தோனேஷியாவிலும் கிளை பரப்பியுள்ளது.

சிங்கப்பூரில் அதிகாரபூர்வமான முயிஸ் அமைப்பு ஒட்டுமொத்தமாக இவர்களின் வியாக்கியானங்களை மறுத்து இது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்று அறிவித்துள்ளது

உடனே Dr. Darlan  “நாங்கள் வேண்டுமானால் கீழ்படியும் மனைவிகள் என்றிருப்பதை ‘‘மகிழ்ச்சியான குடும்பத்திற்கான வழி’’ என்று பெயர் மாற்றிக் கொள்கிறோம்” என்கிறார்.

நல்ல சமையல்காரி, நல்ல தாய், கீழ்படியும் மனைவி என்று கோஷத்தை முன் வைக்கும் இவர்களது பழமைவாதம் குறித்த விஷயங்களை அல்லாமா இக்பால் பல கவிதைகளில் விளக்கமாகவும் அழுத்தமாகவும் வடித்துள்ளார். சமூக நடவடிக்கையில் இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம வாய்ப்புக்களை வழங்குகிறது. பெண்மைக்கு அளிக்கும் பெருமையே சமுதாய வளர்ச்சிக்குத் தூண்டுதல் என்றார்.

‘அஸ்ரால் ஒராமுல்’ கவிதைப் படைப்பில்

ஆணின் நிர்வாணத்தை

ஆடையாய் மறைப்பவள் பெண்

அழகிய இதயத்துக்கான ஆடையை

அன்பினால் தருபவன் ஆண் என்கிறார்.

அவர் சமயம் சாராத கோட்பாடுகளை இஸ்லாமியத்துடன் ஒப்பீடு செய்வதிலும், இஸ்லாத்திற்கு இசைவாக அவற்றை எடுத்துச் செல்வதிலும், இஸ்லாத்திற்கு இசைவாக அவற்றை எடுத்து செல்வதிலும் முன்னேற்றமான எண்ணங்களின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தவர்.

OWC அமைப்பு தெரிவித்திருக்கும், தவ்ஹீத் மஹர், முஸ்குஸ் போன்ற சொற்களுக்குச் சரியான விளக்கம் பெற எண்ணி இமாம் ரஹ்மான் என்ற ஓய்வுபெற்ற பேராசிரியர் தற்போது பகுதி நேரமாக மதரஸாக்களில் சமயப் பாடங்கள் நடத்தி வருகிறார். சனி, ஞாயிறு தவிர அவரைச் சந்திக்கமுடியாது. இந்த நாட்களில் எங்கும் கடையை விட்டு நகரமுடியாது.

சென்றவாரம் அவரிடம் இந்த அமைப்பு பற்றி விளக்கம் கேட்டு தொடர்ந்து தொலைபேசி தொடர்பு கொண்டேன். அவர் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் Kecia Aliயின் ‘‘Marriage and Slavery in early Islam” அல்லது தாலித் அபு எழுதிய God’s name, Islamic law Authority and woman என்று இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்து படித்துப் பார்க்கச் சொன்னார்.

நான் இந்த வாரம் உயிரோசையில் இந்த சூடான விஷயத்தை வலையேற்றிவிட வேண்டும் என்ற ஆவலில் கேள்விகளைத் தயார் பண்ணிக்கொண்டு போனிலேயே உரையாட நேரம் கேட்டு ஆளைப் பிடித்துவிட்டேன்.

மலாயில் Taat என்றால் கீழ்படிதல் என்று பொருள்taat isteri kepoda swami (a wife’s obedience to her husbend) என்பதைப் பெயராக வைத்து இந்த வார்த்தை மனைவிகள் கீழ்ப்படிவதற்கானது என்று விளக்கம் சொல்வதை அவர் மறுத்தார். இஸ்லாத்தில் கீழ்படிதல் என்பது இறைவனுக்கு மட்டுந்தான்.

பெண்களின் பணிவு கணவன் மூலம் இறைவனுக்குச் சேர்வதாக தவ்ஹீத் (tawherd) என்பதே தவறு என்றார் அமைப்புக்கள் வெவ்வேறு நோக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. சமயத்தின் பழமையையும் பொற்கால உணர்வுகளயும் மீட்சிக்குள்ளாக்கும் நோக்கில் இயக்க நடவடிக்கைகளை சமயத்தின் சில விதிமுறைகளை முதன்மை நிலைக்குக் கொண்டுவந்து உண்மையான பிரதிகளைப் புறந்தள்ளிவிட்டு அந்த இயக்கங்களின் இலட்சியங்களுக்கு ஏற்றதாக வடிவமைத்துக் கொள்கிறார்கள்.

இது வரலாறு முழுக்க நிகழ்ந்து வருகிறது. அவர்களின் இலட்சியங்கள் சாத்தியமாகாதபோது சமய உட்பிரிவுகளோ அல்லது புதிய சமயமோ உருவாகலாம். இப்படிப்பட்ட கருத்துருவாக்கங்களை எல்லா சமயங்களுமே சந்திக்கின்றன என்றார்.

ஆணும் பெண்ணும் சமத்துவ அந்தஸ்து பெற்றிருப்பது பற்றிய கருத்துக்கள், இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கூடி வேலை செய்தல், தமது தேவைகள் பற்றிய பரஸ்பர பரிந்துணர்வு குர் ஆரில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றிலிருந்து சில இடங்களில் ஆண்களை விட மேலான நிலைக்கு உயர்ந்த கதைகள் நிறைய உள்ளன. சலீமாக்களின் காலத்தின்போதே கலிபா அல் முக்ததிர் அவரது தாயை உயர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தலைவியாக நியமித்தது படித்திருக்கிறீர்களா என்று கேட்டு விட்டு,

நபிகளின் வாழ்வு கூறும் உண்மை ஆன்மீகமா, உலகியலா என்பதைவிட அவர்கள் மனிதனாய் வாழ்ந்து உலகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் வழியைக் காட்டினார்கள். பெண்களின் சமத்துவத்துக்கு அவர்கள் வாழ்வே சாட்சி என்றவர்.

OWC அமைப்பிற்குப் பல மில்லியன் சொத்துக்களும், மெக்காவில் 20 அறைகள் கொண்ட வில்லாவும் இருக்கின்றன. அவைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா? என்று சொல்லி முடித்தார்

 thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4497