எல்லோருமே
பிள்ளையார் ஆகிவிட்டோம்
உலகமே எலி வாகனத்தில் பயணிக்கிறது
சிவ பார்வதியைச் சுற்றிய
பிள்ளையாராக
வாமண வாரிசுகள்
ஒரடிப் பெட்டிக்குள்
உலகைச் சுற்றுகிறார்கள்
கால்களைக் கழற்றிவிட்டு
கைவிரல்களால்
ஊழித் தாண்டவம் ஆடுகிறோம்
அரூபச் சிலந்தி வலையை
எலியாய்ப் பிறாண்டிப்
பிராண்டி
பிரபஞ்சம் தாண்டிதேடுகிறோம்
எலிக்கு மனித வாகனம்
இருபத்தொன்றில் வாழ்க எலி சாம்ராஜ்யம்
எலிமயமான எதிர்காலம்
இப்போது நான்காம் தலைமுறை மொபைல் வலையமைப்புத் தொழில்நுட்ப சேவை சிங்கப்பூரில் அறிமுகம் கண்டுவிட்டது. ஒரு விநாடிக்கு 75 மெகாபைட் தரவிறக்க வேகத்திலும் 37.5 தரவேற்ற வேகத்திலும் இனி எகிரலாம்.
வலைத்தளத்தில் எத்தனை கனமான விஷயங்கள் உள்ளன. எத்தனை ஆர்வமூட்டும் விஷயங்கள் உள்ளன. அரசியல், சினிமா, இலக்கியம், ஆன்மீகம், சமூக ஆராய்ச்சிகள், விவாதங்கள் இப்படி. ஆனால், இவற்றையெல்லாம் விட்டு விட்டுக் கோழிச் சண்டை பார்க்கும் குதூகலம்தான் தூக்கலாக இருக்கிறது. கருத்துகள், விழுமியங்களைப் பற்றிக் கவலைகள் எதுவுமில்லை. மாறி மாறி கமெண்ட்ஸ் கொடுத்துக் கொண்டிருப்பது. சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும் என்று பெர்டினாட் ரஸ்ஸல் சொன்ன தத்துவத்தை மேற்கோள்காட்டி ஓர் இணையப் பட்சி சொல்கிறது. 1001 gadgets, gizmes, Duds, game consoles, computers, mobile phones, MP3, electronic book reader இவற்றை வைத்துக் கொண்டு நாம் வெறுமனே இருப்பதை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த வெற்றிடம் மறையவே மறையாது. இன்னும் அதிகமாக அதைப் பற்றிய கவலைகள்தான் மிஞ்சும் என்கிறார்கள். இதையெல்லாம் மிஞ்சும் ஒரு நண்பர் ஐ போனில் தினமும் கைரேகை, ஜாதகம், கிளிஷோசியம் என்று அறிவியல் ரீதியில் அஸ்திவாரமில்லாமல் போன விஷயங்களை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் தேடிக் கொண்டிருப்பார். அது கூட பரவாயில்லை. இணையத்தில் cizy cot, Netizenபார்த்துவிட்டு online consultants மூலம் முகவரி வாங்கி வாட்டர்லூ ஸ்தீரிட் போக ஆரம்பித்தார். அங்கு Classic fengsuiல் அரைமணி நேரத்திற்கு மூன்று வெள்ளியில் நடந்தது நடக்கப் போவது என்று அனைத்தையும் சொல்லிவிடுகிறார்கள் என்கிறார். சிலருக்கு வருடத்தில் பாதி நாட்கள் வருங்காலத்தை கணிப்பதிலும் மீதி தூக்கத்திலும் கழிந்துவிடுகின்றன.
பொதுவாக 30 வயதுக்குள் இருக்கும் நபர்கள்தான் அதிகமாக ஜோஸ்யம் பார்ப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் முக்கியமாக வருங்காலம், காதல் இரண்டிலும் செல்ல வேண்டிய பாதை ஒரு புள்ளியில் அவர்களைத் திகைக்க வைத்துவிடுவதும், உலகில் திடீர் திடீரென்று நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அவர்களை ஜோஸ்யம் பார்க்கத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள்.
அருணகிரிநாதர் ‘‘நாள் என்ன செய்யும், வினைதான் என்ன செய்யும் என்னை நாடி வந்த கோல் என்ன செய்யும்’’ என்று பாடிய பாட்டுத்தான் எனக்கு அந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.
மெரினா பே சென்ஸ், சந்தோஷா, பேர்ட் பார்க் என்று இணையத்தில் தேடித் தேடி இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்பும்போது ஒரு நண்பர் கேட்டார். இங்குக் குரங்குக் குட்டியை கிடுக்கிப் பிடி போட்டு உயிரோடு கட்டி வைத்துத் தலையை மட்டும் இளநீர் மாதிரி சீவி வைத்துக்கொண்டு மூளையை மட்டும் உறிஞ்சும் இடம் கிளார்க் தீயில் இருக்கிறதாமே அங்குப் போவோமா என்றார். இங்கு அப்படியெல்லாம் விருந்து ஒன்றுமில்லை. குரங்கோடு வேண்டுமானால் உட்கார்ந்து போட்டோ எடுத்து விலங்குப் பண்ணையில் விருந்து சாப்பிடலாம். நைட் சஃபாரி சென்று வாருங்கள் என்றேன்.சைனா, தைவான், ஹாங்காங், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் Rhino கொம்பு, Tiger penis, Deer penis, pig Brains குரங்கு மூளை என்று சாப்பிடும் பழக்கத்தை வலைத்தளத்தில் பார்த்துவிட்டு அந்த நாட்டவர்களெல்லாம் இங்கிருப்பதால் சிங்கப்பூரிலும் அவை கிடைக்கும் என்று அவருக்கு நினைப்பு.
ஆப்பிரிக்கர்கள் கொரில்லாவைச் சாப்பிடுவார்கள். மலேசியா, இந்தோஷேனியாவில் ஒராங் உட்டான் சாப்பிடுவார்கள். இவையெல்லாம் நான் கேள்விப்பட்டதுதான். சீனாவில் பல இடங்களில் தெருக்களில் நாய்க்குட்டிகளை உயிரோடு சுடுநீரில் போட்டுக் கொதிக்க வைப்பதை இணையத்தில் வெளியிட்டு உணர்வுகளைக் கொதிக்க வைத்துவிட்டார்கள். 2003ல் சிங்கப்பூரில் சார்ஸ் நோய் பரவியதற்குக் காரணம் சீனாவில் Guangdong மாநிலத்திலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த விமானத்தின் வழி ஒரு விமானப் பணிப்பெண் மூலம் சிங்கப்பூரை வந்தடைந்தது என்று சொல்வார்கள். அப்போது பூனை, நாய்களைக் கொல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலக்கட்டத்தில் சுமார் 6 மில்லியன் வெள்ளி (culling bill) செலவழிக்கப்பட்டது. இப்போது பூனைகளைக் கொல்லாதீர்கள் இயக்கம் இணையம் மூலமே ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலில் Chong pong தொகுதியில் பூனைகளைக் கொல்லாமல் இனவிருத்திக் கட்டுப்பாடு செய்யும் ஏற்பாடு வெளியுறவுத் துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்களால் இம்மாதம் தொடங்கப்பட்டது. சென்ற மாதம் ஜீரோங் ஈஸ்ட்டில் ‘‘நாய்கறி விற்கப்படும்’’ என்று விளம்பரப் பலகையில் ‘song Aua Jiang” உணவுக் கடையில் விளம்பரம் செய்து தர யாரோ ஒரு புண்ணியவான் முகப்பக்கத்தில் அப்லோட் செய்துவிட்டார்.
அதெல்லாம் ஒன்றுமில்லை ஒரு விளம்பரத்திற்காக அப்படிச் செய்துவிட்டேன். ‘‘சீனத்தில்’’ saigourouஎன்றார் அதன் உரிமையாளர்.AVA அப்படியென்றால் அது என்ன கறி என்று சோதிக்க பரிசோதனைக் கூட்டம் சென்றது உரிமையாளர் அபராதம் 10 ஆயிரம் வெள்ளி 12 மாதங்கள் சிறையிலிருந்து தப்பினார். அது வெறும் பன்றிக் கறி என்று தெரியவந்தது. முகப்பக்கதில் ‘‘அது என்ன வெறும் பன்றிக் கறி’’ நாயை விட நாம் என்ன மட்டமா என்று பன்றி ஃபீல் பண்ணுவதை யாருமே கண்டு கொள்ளவில்லை என்று Comments வந்தது.
மிருகங்களுக்குப் பசி எடுக்கும்போது நம்மைக் குதறுவது இயற்கை. ஆனால் நாம் ஏன் அதைக் குதறவேண்டும் என்று 1800களில் மிருக வதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவருவதற்கு‘‘Mr uptonsinclair” எழுதிய The Jungle என்ற நாவல்தான் தூண்டுகோலாக அமைந்தது. ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் நடக்கும் மிருக வதைகளை Meet your meat.com ல் பாருங்கள். அமெரிக்காவில் நாய்களைக் கொல்லக்கூடாது என்று சட்டமிருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் நாய் உணவுகள் சீனாவில் நாய்களைக் கொல்கின்றன என்கிறார்கள்.
முகப்பக்கத்தை உருவாக்கிய Mark Zuckerburg அசைவ உணவைக் குறைத்துக் கொள்வதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன். அசைவ உணவு சாப்பிட வேண்டுமெனில் என் கையாலேயே அதைக் கொல்லவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக Face bookல் வெளியிட்டார். அத்துடன் முதன்முதலில் ஒரு லாப்ஸ்டரைச் சுடு தண்ணீரில் அமுக்கிக் கொன்று சாப்பிட்டதாச் சொல்ல Face bookல் கமென்ட்ங்கள் இப்படியே சொல்ல ஆரம்பித்தால், தினமும் எதையாவது கொல்ல வேண்டும் என்று ஆசை வந்துவிடும் என்றது. எனக்கும் ஒரு Comments போடவேண்டும் என்று ஆசைவந்தது. கொல்வதற்கு முன்பு கொஞ்சம் அவற்றோடு பழகி அதற்குப் பிறகு நாம் அவைகளை சாப்பிட நினைப்பது அவற்றுக்குச் சம்மதம்தானா என்று ஒருவருக்கொருவர் ஒரு தீர்மானத்திற்கு வந்த பிறகு கொல்லலாம். அதாவது ‘‘பழகிக் கொல்லலாம்’’. ஆனால், நான் Comments போடவில்லை.
‘‘மிருகங்கள்தான் மிருகங்களைக் கொல்கின்றன. ஏனெனில், அவற்றிற்கு வேறு வழியில்லை. நமக்கு ஏகப்பட்ட மாற்று வழிகள் உள்ளன’’ comments I like it. போனவாரம் Face book ஒரு சுவரஸ்யம். 23 வயது Mr Joel Ling எம் ஆர்டியில் ரிசர்வ்டு சீட்டில் 63 வயது Josanwangஎன்பவருக்க் இடம் கொடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததை பேஸ் புக்கில் Josonபடம் போட்டுவிட்டார். ஒரே நேரத்தில் 400 comments Joel ling மன்னிப்புக் கேட்டார். மருந்து சாப்பிட்டுவிட்டு இரயிலில் ஏறிவிட்டேன். மயக்கமாக இருந்தது. அப்படி நடக்கும் ஆள் நான் இல்லை என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எனக்குச் சில வருடங்களுக்கு முன்னால் அமரர் Sujathaசிலாகித்த ஹைக்கூ ஞாபகம் வருகின்றது. என்னருகில் அமர்ந்திருப்பவர் எழுந்திருக்கிறவராய்த் தெரியவில்லை . கர்ப்பிணி நிற்கிறாள்.
டெய்ல் பீஸ்
சிங்கப்பூரில் ‘இரகசிய விருந்து’ என்ற தலைப்பில் ஒரு செய்தி இணையத்தில் படித்திருப்பீர்கள். அது ஜப்பானில் பின்பற்றப்படும் ‘‘nyotaimori” சூஸிக் கஞ்சியை நிர்வாணமாகப் படுத்திருக்கும் பெண் மீது வைத்து சாப்பிடும் முறை.
அதில் உணவு சாப்பிடுவதின் ஆனந்த நிலை ஏற்படுவதாக Dr Kcra (NUS) சொல்கிறார். சிங்கப்பூரில் இது இருப்பது இது நாள் வரை தெரியவில்லை. தெரிந்தாலும் நாம் பார்க்கமுடியாது. ஏனெனில் அது private.
what ought to be public and what ought to be private.
thanks:http://thangameen.com/ContentDetails.aspx?tid=396