மேகம் தங்கும் மாடம்

Posted: பிப்ரவரி 8, 2021 in வகைப்படுத்தப்படாதது

உலகத்தில் இருக்கும் பல கலாச்சாரங்களிலும் பல மொழிகளிலும் ஏதேன் தோட்டத்தைப் பற்றி, வித்தியாசமான கதைகள் சொல்லப்படுகின்றன. பூமி முழுவதும் மக்கள் சிதறிப்போகும்போது இந்தத் தோட்டத்தைப் பற்றிய நினைவுகளை ஒவ்வொருவரும் எடுத்து சென்றார்கள். காலம் போகப்போக கட்டுக்கதைகளும் மத நம்பிக்கைகளும் அந்தத் தோட்டத்தைப் பற்றிய உண்மைகளோடு கலந்துவிட்டன. இன்றும்கூட பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உலகின் அழகான இடங்களை, ஏதேன் தோட்டம் போல் இருக்கிறது என்று வர்ணிக்கிறார்கள்.கவிஞர் ஜான் மில்டன், பாரடைஸ் லாஸ்ட்டில் பூமியில் மக்களுக்கு என்றென்றும் வாழும் வாழ்க்கை திரும்பவும் கிடைக்கும் என்பதைச் சிறப்பித்து காட்ட, “பூமி மீண்டும் ஒரு பூஞ்சோலையாக மாறும்” என்ற வார்த்தைகளை எழுதினார். பிறகு, பாரடைஸ் ரீகெய்ன்ட் என்ற காவியத்தையும் அவர் எழுதினார்.ஒவ்வொரு பன்மைக் கலாச்சாரம் உள்ள நாட்டிலும் அந்தந்த நாடுகளின் புகழ் பெற்ற கலை வடிவங்களை தோட்டங்களில் நிறுவி அம்மாதிரி பூஞ்சோலைகளை நிறுவுகிறார்கள்.

இந்திய மற்றும் அமெரிக்க கட்டிடங்கள். சீன, ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையே உலகின் மூன்று முக்கிய கட்டிடவியல் முறைகளாக கருதப்படுகின்றன. இதில் சீன மற்றும் ஐரோப்பிய கட்டிடவியல் முறைகள் மிக நீண்டகாலம் தழைத்துச் செழித்து, மிகப் பரந்துப்பட்ட அளவில் பரவலாயின. சீனக் கட்டிடவியல் பல வகைகளாக பகுக்கப்படுகின்றது.நகரம், மாளிகை, கோயில், நினைவுக்கல்லறை கோபுரங்கள், துறவியர் மடங்கள், புத்த விகாரைகள், கற்குகைகள், தோட்டங்கள், அரசு அலுவலகங்கள், மக்கள் பொதுவாகக் கூடுமிடங்கள், இயற்கைக் காட்சியிடங்கள், கோபுரம் மற்றும் மாடங்கள், அரச அரண்மனைகள், குடியிருப்பு வீடுகள், பெருஞ்சுவர், பாலங்கள் என அவை வகைப்படுத்தப்படுகின்றன.


1975 களில் நெருக்கடியான தொழிற்பேட்டைகள் அடர்ந்த ஜூரோங் பகுதியில் 13.5 ஹெக்டேர் நிலப் பரப்பில் உருவாக்கப்பட்ட சைனீஸ் கார்டன் பூங்கா இன்றைய நவீன சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க பொழுது போக்குத் தளமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் சீனக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட அந்த 7 மாடிக் கொபுரமும் ,13கண் பாலமும் ,கல் படகும் தென்கிழக்காசிய பூங்காக்களிலிருந்து சேகரித்து நடப்பட்ட பொன்சாய் மரங்களும் சூழப்பட்ட ஜூரோங் ஏரியும் பலரின் இளமைக் கால ஆல்பங்களில் தவறாமல் இடம் பெற்றவை ..இதில் நிறுவப்பட்ட மூன்று மாடி இரு கோபுரங்களின் பெயர்கள்.

மேகம் தங்கும் மாடம்
அடுத்தது நிலவு வரும் மாளிகை ..
நாம் முதன் முதலாக அனுபவிக்கும் கலையனுபவங்களும் ,காட்சி அனுபவங்களும் நம் மனதின் முதல் அடுக்கில் படிந்து விடுகின்றன ஆண்டுகள் பல சென்றாலும் மீண்டும் அந்த இடங்களை பார்க்கும்போது முதல்சுவை பீரிட்டுக் கிளம்புகிறது ..இந்தப் பெயர்களை எனக்கு அன்று சொன்ன நண்பர் இன்றும் என் நினைவில் நிற்கிறார் .. ..
பழுத்து உதிர்ந்த இலையின் இடங்களை ஒதுக்கிவிட்டு பசுமையான பொன் சாய் செடிகளின் அருகில் நிற்கச் சொல்லி என்னைப் படம் எடுத்த என் தந்தையின் நினைவுகளோடு , கடந்து சென்ற வசந்தங்களை திரும்பிப் பார்க்கவைத்த
தருணங்கள் .. சிங்கப்பூர் சீனத் தோட்டம்

பின்னூட்டங்கள்
  1. ஆழி. சுபஹான் சொல்கிறார்:

    பழமையான சுவராசியமான செய்திகள் நிறைந்த கட்டுரை. ஏதேன் தோட்டத்தை நோட்டமிட ஏக்கமாக்கியது உங்கள் கட்டுரை. நன்றி அண்ணன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s