
கிள்ளி வளவன் – தெண்கண் மாக்கிணை முழக்கிச் சென்ற புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்க்கு விடியலில் பாம்புத்தோல் போன்ற கலிங்கம், நெய்யில் பொறித்த கறி, மணிக்கலத்தில் தேறலும் . புலவர் கோவூர் கிழார்க்கு வறுத்த உப்புக் கண்டம், கலம் நிறைய பால் வழங்கினான் என்ற குறிப்பு வாசித்தேன் வறுத்த உப்புக்கண்டம் சாப்பிடுவது சங்க காலத்தில் ஒரு மாற்று ருசிப்பண்டமாக இருந்திருக்கிறது .ஆனால் பெரு விருந்துக் கொண்டாட்ட நாட்களில் உப்புக்கண்டம் சாப்பிடுவது மிஞ்சும் இறைச்சியை வீணாக்காமல் பயன் படுத்துவது தமிழர் உணவுக் கலாச்சாரம் ,அது ஒரு சீனப் பெரு நாள் சடங்காக மலேசிய ,சிங்கப்பூர் சீனர்களிடம் எப்படி பரவியது என்று தெரியவில்லை,இந்த ஆண்டு உப்புக் கண்டத்திற்கு இணைய வியாபாரத்தில் அதிக ஆதரவு .பக்வா உப்புக் கண்டம் கிலோ 68 வெள்ளி ஆனாலும் சைனா டவுனில் உள்ள ஒரு புகழ் பெற்ற உப்புக் கண்ட கடையில் நீண்ட வரிசை ஒரு நபருக்கு 50 கிலோவுக்கு மேல் விற்பனையில்லை என்று அறிவிப்பு செய்திருந்தார்கள் ..

பக்வா ,அனேகமாக சிங்கப்பூரில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ,ஆடு, மாடு, பன்றி இறைச்சியில் செய்யப்படும் உப்புக் கண்டம் , விழாக்காலங்களில் பன்றி இறைச்சிக்கே முன்னுரிமை அத்தோடு பாரம்பரிய வகையான சுவை என்ற அடிப்படையில் மூலப் பொருளான பக்வா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
விருந்து கொண்டாட்டங்களுக்கு என்னை அழைத்து செல்லும் சீன நண்பர்கள் பக்வாவை என்றுமே என் கண்ணில் காட்டியதில்லை ,பைன் ஆப்பிள் டார்ட் தவிர மிகவும் கவனமாக மாற்று மத நண்பர்களுக்கு உணவுகளை வழங்குவார்கள் . சீனப் பெரு நாள் கொண்டாட்டங்களில் மத சம்பந்தமான சடங்குகளை விட கலாச்சார விழுமியங்களே முதல் நிலை பெறுகின்றன அதற்கு உதாரணமாக மலாய்க் காரர்கள் “யோசுங் “சீனக் கொண்டாடங்களில் கலந்து கொள்ள ஏதுவாக ஹலால் யோசுங் இருப்பது சிங்கப்பூரில் மட்டுதான் ,சீனர்களை படிப்பிலும் ,தொழிலும் இந்தியர்கள் அதிக நண்பர்களாகக் கொண்டது சிங்கப்பூர் ,கடந்த ஆண்டில் மண வாழ்க்கையில் நுழைந்த 5ல் ஒருவர் cheongsam (Chinese ethnic Dress ) ல்மாலை மாற்றிக் கொண்டவர்கள் .

(மாற்று இனத்திலிருந்து தன் இணையத் தேடிக் கொண்டவர்) என்று புள்ளிவிபரங்கள் கூறுகிறது ., என்னிடம் அதிக நாட்கள் வேலை செய்த பல சீனர்கள் தங்கள் வேலையிலும் பழகும் முறையிலும் சீனாக் கலாச்சாரத்தின் மிக உன்னதமான முத்திரைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் ,மத வேறுபாடுகளை ஒரு துளி கூட நான் உணர்ந்ததில்லை ,இரண்டு தோடம் பழங்களுடன் சீனப் பெரு நாள் முதல் நாளில் என்னை முதலில் பார்த்து விட்டு வேலை ஆரம்பிக்கும் நண்பராக பழகிவிட்ட பக்கத்து கடை சீன ஊழியர் தான் செய்யும் கிளாசிக் கடலுணவை நான் ஒரு முறையேனும் ருசித்து பாராட்ட வேண்டும் என்று விருப்பப்பட்டாலும்
என்னைக் கட்டாயப் படுத்துவதில்லை ,

நீ கொடுக்கும் இறைச்சி பிரியாணியை நான் சாப்பிடுகிறேன் ஆனால் நீ சாப்பிட மறுக்கிறாய் என்று ஒவ்வொரு முறையும் Baozhai நினைத்துக் கொண்டிருப்பார் ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் புலவர் ஆவூர் மூலங்கிழாரை கட்டாயப்படுத்தி “என் மேல் ஆணை புலவரே சாப்பிடுங்க என்று சாப்பிட வைக்கும் குறு நில மன்னன் கீரஞ்சாத்தன் போல் நடந்துகொண்டதில்லை 😁
அருமை 👏👏