Archive for the ‘அழைப்பிதழ்’ Category
தென்னிந்தியாவின் அலிகார்
Posted: ஜனவரி 6, 2011 in அழைப்பிதழ், கடிதம்குறிச்சொற்கள்:ஜமால் முஹம்மது கல்லூரி
1965-70 களில் “சிங்கப்பூர் பெக்ஷியா” பள்ளியில் ஒரே வகுப்பில் சுமார் 50 தமிழ் மாணவர்கள் படித்திருக்கிறார்கள். திருமதி குணவதி நல்லதம்பி (பள்ளி ஆசிரியை) எண்ணத்தில் இந்த 50 பேரையும் ஒரு சேரப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலிட ஒவ்வொரு பூவாக கோர்க்க ஆரம்பித்தார். அத்தனை பேர் விபரங்களையும் திரட்டி பெரிய மாலையாக்கிவிட்டார். அந்த பெக்கிஷியா தோட்டத்தின் பூக்களில் ஒருவர் என் நண்பர் ஹாஜாமைதீன் (தொழிலதிபர்), அவருக்கு என்ன பிரச்சினை என்றால் என்னை விட்டு விட்டு எந்த நிகழ்வுக்கும் போவது அவ்வளவாக பிடிக்காது. உப்புக்கு சப்பானியாக என்னையும் அவர்களுடைய கூட்டத்திற்கு கூட்டிச் சென்றார். அடடா! என்ன ஒரு நெகிழ்ச்சி Mr.குலாம் டிவி புகழ் Mr.லிங்கம் ஒருவருக்கொருவர் கட்டி பிடித்து, சிறுவயது முகங்களைத் தேடி தேடி முகங்களை வருடி புளங்காகிதம் அடைந்தார்கள். ஓரத்தில் தனியாக விடப்பட்ட நான் என் பள்ளி கல்லூரித் தோழர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனையில் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கற்பனையை நனவாக்க Mr.காதர் அவர்களிடமிருந்து பளிச்சென ஒரு மின்ன(ஞ்ச)ல் வந்தது. ஜமால் முஹம்மது கல்லூரியின் பழைய மாணவர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருக்கிறது என்ற செய்தியுடன்…
நண்பர் ஜலாலுடன் நிகழ்சிக்கு விரைந்தேன், எத்தனைபேர் என் செட்டில் வந்திருக்கிறார்கள் என்ற ஆவல் மேலோங்கி அங்குமிங்கும் கண்களை படரவிட்டுக் கொண்டிருந்தேன்.
1970 71 என்று ஆரம்பித்து எனக்கு 10 வருட முந்தைய செட்டில் பழைய மாணவர்கள் வந்திருந்தார்கள். 80த் தொட்டவுடன் என் பேட்ச் தோழர்கள் இருவர் எழுந்தனர், இளமை முடிந்துவிட்டது ஆனால் இன்னும் மாறா புன்னகை முகத்துடன் எழுந்து நின்றார்கள். எத்தனை எத்தனை அதிகரிகள், வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் சிங்கப்பூரில் இத்தனை நாட்களும் தவறவிட்டோமே என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது. தென்னிந்தியாவின் அலிகார் என்று புகழப்படும் ஜமால் முகம்மது கல்லூரிக்கு இந்தவருடம் “வைரவிழா” அதில் தரமான கல்வியை பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்பு பெற்றவர்களாக வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள் என்று அந்த கூட்டமே வெளிப்படுத்தியது.
இந்த பழைய மாணவர்கள் நாம் நடந்த டோல்கேட்டில் நடந்தவர்கள், முதன்மை அரண் கதவை (மெயின்கார்டு கேட்) சுற்றியவர்கள், உச்சிப்பிள்ளையார் கோவிலின் 437 படிக்கட்டுகளில் ஏறி இறங்கியவர்கள், சங்கிலியாண்டபுரம் டூரிங் தியேட்டரில் எம்ஜியார் சிவாஜி படம் பார்த்தவர்கள், திவான் ஸ்டூடியோவில் கோட் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள், ஹாஸ்டலில் குஸ்கா சாப்பிட்டு தூங்கி வகுப்புக்கு கட் அடித்தவர்கள், அத்துடன் திருச்சியின் நல உதவித் திட்டங்களில் என்றும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய அனுபவமும் ஒரே புள்ளியில் சந்தித்து மீண்டன.
திருச்சியில் மொத்தம் 30 கல்லூரிகள் இருக்கின்றன. அதில் நம் கல்லூரியின் சிறப்பையும் பழைய மாணவர்களின் ஈடுபாட்டையும் முன்னெடுத்துச் செல்ல ஜமால் முஹம்மது அலுமினி (சிங்கப்பூர்) முறையாக தொடங்கப்பட்டு அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
(Vist @ http://www.jmcalumni.org.sg/ )
வருகிற 30.01.2011 அன்று நாம் அனைவரும் ஒன்று கூடி பயணப்படவேண்டிய இலக்கை முடிவு செய்யவிருக்கிறோம்.
இன்னும் நம் சிங்கப்பூர் நண்பர்கள் பலருக்கு தகவல் சென்று சேரவேண்டியிருக்கிறது.
வாருஙங்கள் கைகோர்ப்போம்
சிங்கப்பூர் ஜமாலியன்களை அடையாளம் கண்டு கூட்டிவாருங்கள்
தொடர்புக்கு :
என்னுடைய அலை பேசி எண்: 82858065
MR.Kader – 96933786 or 63981020
ஆட்டத்தின் அடுத்த கட்டம்
Posted: திசெம்பர் 2, 2010 in அழைப்பிதழ், உயிர்மை, கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, eசைகுறிச்சொற்கள்:உயிரோசை, சிங்கப்பூர்
ஆட்டம் ஆரம்பம் (2011)
Posted: நவம்பர் 11, 2010 in அழைப்பிதழ், இலக்கிய சர்ச்சை, உயிர்மை, கடிதம், கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, eசைகுறிச்சொற்கள்:2011, இந்திரஜித், உயிர்மை, சிங்கப்பூர், புத்தககண்காட்சி, மனுஸ்யபுத்திரன்
வாசகர் வட்டம் – 15.08.2010 – சிங்கப்பூர்
Posted: ஓகஸ்ட் 12, 2010 in அழைப்பிதழ், சிறுகதை, நாவல்குறிச்சொற்கள்:தி ஜானகிராமன், வண்ணநிலவன், வாசகர் வட்டம்
அன்புள்ள நண்பர்களுக்கு
ஆக்ஸ்ட் மாதம் வாசிப்பை நேசிப்போம் மாதம்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நூலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டக் கதைகள் ”அம்மா வந்தாள்” – ”தி ஜானகிராமன்” ”கடல்புரத்தில்” – ”வண்ணநிலவன்” இந்த இரு நூல்களையும் படித்து ஒரு விமர்சனக்கட்டுரை, அல்லது புனைவுகளைப் பற்றிய ஒரு பார்வை, எழுத்து நடை, இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள், இவர்களை முன்னிறுத்தி பெண்ணீயம் போன்ற கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் புத்தகங்கள் அனைத்து நூல் நிலையங்களிலும் கிடைக்கின்றன. நிறையப் பிரதிகள் இருக்கின்றன. ஆகையால் இவற்றைப் படித்து கட்டுரைகளுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.கட்டுரைகள் படைக்கவில்லையென்றாலும் ஒரு பார்வையாளராகவோ ஒருவாசகராகவோ கலந்து கொள்ளலாம். கட்டுரைகள் படிக்கப்படும் போது அவை குறித்தான கருத்துகள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் புத்தங்களைப் படித்து வந்தால் சிறப்பு!!!!
இடம்: அங் மோ கியோ நூலகம்
அறை: டொமேட்டோ அறை (முதல் மாடி)
நேரம்: மாலை 5.00 மணி நாள்: 15-8-2010 ( ஞாயிற்றுக் கிழமை)
வாசகர் வட்டம் எந்த தலைமையும் இல்லாமல், எந்த அமைப்பையும் சாராமல் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி! எனவே இலக்கியப் பரிமாற்றம் என்ற ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும் என்ற விருப்புடன் மற்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறக்கணித்து விட்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று
வாசகர் வட்டம் சார்பாக அழைப்பது
அன்புடன்
சித்ரா
வாசகர் வட்டம் (மணற்கேணி 2009)
Posted: மே 17, 2010 in அழைப்பிதழ்குறிச்சொற்கள்:சிங்கை பதிவர்கள், மணற்கேணி 2009, வாசகர் வட்டம்
பிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் வருகை-in Singapore)
Posted: ஏப்ரல் 20, 2010 in அழைப்பிதழ், சிறுகதை, நாவல், eசைகுறிச்சொற்கள்:பிரபஞ்சன், ஷாஜி
‘எனக்குள் இருப்பவள்’
‘வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்’
‘மனிதர்கள் மத்தியில்’
‘சந்தியா’
‘சுகபோக தீவுகள்’
‘பூக்களை மிதிப்பவர்கள்’
‘குமாரசாமியின் பகல்பொழுது’
கதை சொல்வது மாதிரி இருக்கிறதல்லவா…
சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளில் முத்திரை பதித்த பிரபஞ்சனின் படைப்புகள்தான் இவைகள்.
தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரை சிறந்த எழுத்தாளர் என்று கௌரவித்துள்ளது.
என்னற்ற இலக்கிய மரியாதை பெற்றவர்.
அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திர படைப்பு, மனித நேயத்தை உன்னதப்படுத்தும் லட்சியம் இவரது எழுத்தின் சிறப்பு…
மனித சுபாவம் எல்லா எல்லா காலங்களிலும். எல்லா தேசத்துக்கும் இலக்கியத்தின் கருப்பொருளாக இருந்து வருவதை பார்க்கிறோம். உருவம், யுக்திகள் மாறலாம். இது மட்டும் மாறுவதில்லை. மனித சுபாவத்தில் இத்தனை சுழிப்புகள் இருப்பதாலோ என்னவோ, இத்தனை காதல் இத்தனை காரியங்கள் இங்கு சாத்தியமாகின்றன.
பல ஆயிரம் மைல்களை கடந்து வந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலேயே பிறந்த தமிழனுக்குள்ளும் செயல்பட்ட மனித சுபாவத்தை உடைத்துப் பார்த்த இவரது நாவல் ”வானம் வசப்படும்” சாகித்திய அகடாமி பரிசு பெற்றது.
சிறுகதைகள், நாவல்களும் ஒரு அனுபவத்துளி மட்டுமல்ல அது ஒரு முழு வாழ்வின் சிறு துளி. அதில் கூறப்பட்ட தளங்களுக்குள்ளே ஒரு முழு வாழ்வை நம் நினைவில் விரித்துக்கொள்ள முடிந்த எழுத்துக்கள் பிரபஞ்சனுடையவை…
வாருங்கள் …
எதிர்வரும் வெள்ளி (23.04.2010) மாலை 6.30மணிக்கு தேசிய நூலகத்திலும்
திங்கள் (26.04.2010) மாலை 7.00மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்திலும்
பிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் நினைவுகளை நிரப்பிக்கொள்ள…
அப்துல்காதர் ஷாநவாஸ்