Archive for the ‘உயிர்மை’ Category

எஸ்.வேணுகோபாலன் புஷ்பா தங்கதுரை; ராமச்சந்திரன் வண்ண நிலவன்; எஸ்.டி.பாஸ்கரன் சவீதா; சி.எஸ்.லட்சுமி அம்பை; சோமசுந்தரம் கலாப்ரியா; டி.ஆர்.ராஜகோபாலன் ஸிந்துஜா; நம்பிராஜன் விக்கிரமாதித்தன்; எஸ்.அப்துல் ஹமீது மனுஷ்ய புத்திரன் ………

புனைபெயர்களுக்கு உரியவர்களின் இயற் பெயர்களைப் பற்றிய அரட்டை இன்று ஞாயிறு கோப்பிக் கடையில் களை கட்டியது. 1962ல் இடது ஓரத்தில் என்ற சிறுகதையைக் குமுதத்தில் எழுதி விட்டு, இரண்டு ரங்கராஜன்கள் குழப்பமாகி விடும் என்ற நிலையில் ஒரு ரங்கராஜன் தன் பெயரை சுஜாதா என்று மாற்றிக் கொண்டதில் ஆரம்பித்த உரையாடல், சோ.விருத்தாசலம், புதுமைப்பித்தனாக மாறியதைத் தொட்டது. இறுதியில் புனைபெயர் வைத்துக் கொள்ளலாம்; ஆனால் புனைசுருட்டுத்தான் கூடாது என்று ஒரு வழியாகக் கூட்டம் முடிவுக்கு வந்தது. புலம் பெயர்ந்தவர்களின் முதல் பிரச்சினை தன் பெயரை, அந்நாட்டில் உள்ளவர்களின் போக்குக்கு ஏற்ப மாற்றுவதில்தான் ஆரம்பிக்கிறது. அதிகமான பெயர்கள் சுருக்கமாக அழைக்கப்பட்டு, அவையே நிலைத்த பெயராக மாறி விடுகின்றன.

சிங்கப்பூரில் சீனர்களுடைய பெயர்கள் மூன்று எழுத்துக்கள் கொண்டவையாக நறுக்கென்று இருக்க வேண்டும். ஆனால் அவர்களை நாம் அழைக்கும்போது உச்சரிப்பு மற்றும் மரியாதை ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கூப்பிட ஆரம்பிப்பதே வியாபாரத்தின் முதல் வெற்றி. வழக்கமாக வாடிக்கையாளர்களின் பெயர்களை முழுவதுமாகக் குறிப்பேட்டில் எழுதிக் கொண்டு அதில் இலகுவான உச்சரிப்புக்கு ஏற்ற சொல்லாக நான் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவேன்.

வழக்கமாக சாப்பாடு ஆர்டர் பண்ணும் மியான்மர் நாட்டவர் ஒருவரின் முதல் பெயரை எழுதிக் கொடுக்குமாறு கேட்டு வாங்கிக் கொண்டேன். “U kin muang myint”என்ற அவரது பெயர் உச்சரிப்பதற்குச் சிரமமான பெயராக இருந்தது. அவரை மிஸ்டர் யூ என்று கூப்பிடுவது எனக்குச் சுலபமாக இருந்தது. சில நாட்கள் சென்றிருக்கும். கம்பெனி முதலாளியான சீனர் காசோலை கொடுப்பதற்காகக் கடைக்கு வந்திருந்தார்.

நேரில் வர வேண்டியதில்லையே! மிஸ்டர் யூவிடம் கொடுத்திருக்கலாமே? என்றேன்.

அவர் பெயர் என்ன சொன்னீர்கள்? என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

எனக்குப் புரிந்து விட்ட்து. தவறான உச்சரிப்பில் அவரை அழைத்து வந்திருக்கிறேன் என்று!

U kin muang myint என்ற பெயரில் முற்பகுதியில் இருக்கும் U’ மரியாதை நிமித்தம் உள்ள சொல். அதாவது மிஸ்டர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கும் சொல் அது. அதைத் தனது பெயருடனேயே அவர் ஒட்ட வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். பெரும்பாலான பெயர்கள் U’ வில்தான் ஆரம்பம் ஆகின்றன. இது வரை அவரை இரண்டு மிஸ்டர் போட்டு அழைத்து வந்திருக்கிறேன்! ‘U’ என்பது ஆண்களுக்கும் Daw’ என்பது பெண்களுக்கும் பெயருக்கு முன்னால் வரும் அடைமொழிகள். மியான்மரில் வயதில் மூத்தவர்கள், இளையவர்களை ‘U’ மற்றும் ‘Daw’ என்று அழைக்க வேண்டியதில்லை. அவர்களில் ஆண்களை Ko’ என்றும் பெண்களை ‘Ma’ என்றும் அழைக்கலாம்.

மிஸ்டர் போடுவது மலாயில் Encik என்று சொல்லப்படுகிறது. அது கொஞ்சம் மருவி இப்போது Inche’ என்றாகிவிட்டது. காலித் ஹம்சா என்ற பெயருள்ளவரை Inche ஹம்சா என்றழைப்பது தவறு. அது அவருடைய தகப்பனார் பெயர். இப்போது காலித் பின் ஹம்சா என்று பெயர் வைத்து விடுவதால் அதாவது ஹம்சாவின் பிள்ளை காலித் என்பதால் கூப்பிடுவது கொஞ்சம் சுலபம். அதே போல Binte’ என்பது இன்னாருடைய மகன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். ஃபாத்திமாவை Cik Fathima’ என்று உச்சரிக்கும்போது Che’ என்று மட்டும் ஒலித்தால் போதுமானது.

இவர் காலித் ஹம்சாவைத் திருமணம் செய்து கொண்டால் Puan Fathima” என்றாகி விடுவார். Puan Chalid என்று அழைப்பது தவறு. மெக்கா புனித யாத்திரை சென்று வந்தவர்கள் Haji ….. Haja…. என்று அழைக்கப்படுவார்கள்.

Inche ஹாஜி அப்துல்லா என்று அழைப்பதை விட துவான் ஹாஜி அப்துல்லா என்று அழைப்பதுதான் சரி. காலித் ஹம்சாவுக்கு டத்தோ பட்டம் அளிக்கப்பட்டால் டத்தோ காலித் ஆகிவிடுவார். அதே போல் அவர் மனைவி ஆட்டோமேட்டிக்காக TANSRI அல்லது PUANSRI ஆகி விடுவார். இந்த டத்தோ பட்டம் காலித் ஹம்சாவுக்குக் கொடுக்கப்படாமல ஃபாத்திமாவுக்கு அவருடைய சேவைக்காக சுல்தானால் அளிக்கப்பட்டிருந்தால் அளித்திருந்தால், அவரை டத்தோ ஃபாத்திமா என்றுதான் அழைக்க வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள நம்மவர்களின் கடவுச் சொற்களில் பெயர்கள் சுருக்கமாக இருந்து நான் பார்த்ததில்லை. பெரும்பாலும் கடைசியாகக் குறிப்பிட்டுள்ள தகப்பனார் பெயரையே அழைப்பார்கள். கரடு முரடான உச்சரிப்புக்களைக் கடந்து பெயர் வெளி வருவது வேடிக்கையான நிகழ்வாக இருக்கும். “நேசமணி பொன்னையா என்பதை நாசமா நீ போனியா என்று சொன்னதாக ஒரு ஜோக் பரவலாக வலம் வந்தது.

சீனர்களுக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. சிங்கப்பூரில் லீ டான் வோங் என்ற பெயர்கள் அதிகமாகக் காணப்படும் பெயர்கள். வேலை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றில் “Shen Tiew Lee” என்பவர் வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு வந்திருக்கிறார். வரவேற்பாளர் Mr.Lee” என்று முதல் குரல் கொடுத்திருக்கிறார். அறையில் இருந்தவர்களில் பாதிக்கு மேல் எழுந்து கவுன்டரை நோக்கிச் சென்றிருக்கிறார்கள்.

நோ! ஷான் லீ என்று கூப்பிட்டிருக்கிறார்.

“Shen Tiew Lee” என்ற பெயரில் அழைத்தால்தான் எழுந்து போக வேண்டும் என்று பிடிவாதமாக உட்கார்ந்து விட்டார்.

எல்லோரும் காரியம் முடிந்து அறையை விட்டு வெளியேறிய பிறகு, கடைசி ஆளாகக் கவுன்டரில் Shen Tiew Lee” என்று அழைத்த பிறகுதான் அவரை அழைக்கிறார்கள் எனறு நம்பிக்கை வந்திருக்கிறது.

சீனர்களுக்கு மூன்று பெயர்கள் இருக்கும். முதலில் குடும்பப் பெயர். நடுவில் பரம்பரைப் பெயர், கடைசியாகச் சொந்தப் பெயர். குடும்பப் பெயர் Tan அல்லது Ganல் முடிந்தால், அவர்கள் ஹாக்கீன் அல்லது தியோசோங் இனத்தவர்.Chan அல்லது Wong என்று முடிந்தால் அவர்கள் காண்டனீஷ்.

Gan peck Lee (மூன்று சகோதரர்கள்)

 

Gan peck Har

Gan peck Gook

அவர்களின் இரண்டு சகோதரர்கள்

Gan Chen Lee

Gan Cheng Meng

திருமணம் ஆகாத பெண் Miss Lim Swee Ai அவருக்கு Shen Tiew Le உடன்திருமணம்ஆகிவிட்டால் MrsShew தான். மேடம் Lim Swee அல்ல. தைவானிலும் சீனாவிலும் டாக்டர் மற்றும் ஆசிரியர் ஆகியோரைப் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதில்லை. அவர்களை அழைக்க, பட்டப் பெயர்களையே பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் பல்கலைக் கழகங்களில் உயர் பதவிகளை வகிப்பவர்களைக்கூட மிஸ்டர் என்று விளிப்பது சீன மாணவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர்கள் சீனாவில் கம்பெனி மேலாளர்களைக்கூட “LISHI” என்றும் இயக்குநர்களை “ZHUSIஎன்றும்அடைமொழியுடனேயேஅழைத்துப்பழக்கப்பட்டவர்கள்.

நான்ஹாங்காங்சென்றிந்த நண்பரின்மனைவியைபோதுசீனநணபர்ஒருவர்தனதுஎனக்குஅறிமுகப்படுத்தினார். இவர்Mr. Wong Tai Tai(மனைவி) என்று சொன்னார். சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் பெயர்களை அழைப்பது அவ்வளவு வித்தியாசமில்லை. ஆனாலும் அவர் tai tai என்பதை அழுத்தமாகச் சொல்லிப் புரிய வைத்தார்.

இந்தோனேஷியர்கள் இரண்டு மூன்று பெயர்களைத் தவிர்த்து ஒற்றைப் பெயரிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள். ‘SUMA MORO’ என்ற இந்தோனேஷியர் மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்ற போது இவரின் ஒற்றைப் பெயர் அங்கு பல பேருக்குச் சங்கடமாகி விட்டதாம். உடனே தனது பெயரை S.SUMA MORO என்று மாற்றிக் கொண்டாராம். S என்பது குடும்பப் பெயரா என்று கேட்பவர்களுக்கு ஆமாம் என்று தலையாட்டி விடுவாராம். தன் பெயரையே ‘SUMA MORO SUMA MORO’ என்று இரட்டையாக்கி சமாளித்தது பெரிய விஷயம் என்கிறார். இவ்விஷயத்தை அமெரிக்கா படிக்கச் செல்லும் தன் நண்பன் MOESTONOவிடம் சொல்லி, இரண்டு பெயராக இப்போதே மாற்றிக் கொள் என்று யோசனை அளித்திருக்கிறார். அவர் உடனே MOESTONO SAYA (அதாவது நான்தான் MOESTONO) என்று மாற்றிக் கொண்டாராம். ஆனால் அமெரிக்காவில் SAYA என்ற கடைசி வார்த்தை மிகவும் பிடித்துப் போய், “மிஸ்டர் SAYA என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

இந்தோனேஷியர்களின் மலாய் கொஞ்சம் வேறுபட்டது. முதியவர்களை BEPOK (தந்தையே) என்ற அடைமொழியுடனும் பெண்களை IBU என்ற அடைமொழியுடன் கொஞ்சம் சுருக்கி BU FATHIMA என்ற தொனியில் அழைப்பார்கள். வயதில் இளையவர்களை சகோதரர் என்ற அர்த்தத்தில் BANG என்றும் பெண்களை “NONA” என்றும் அழைப்பார்கள். ஆனால் மற்ற நாடுகளைப் போலவே பட்டங்கள் குறைவில்லாமல் இருக்கும்.

RADAN EMAS

(தந்தை மகன்)

EYANG PUTERI

(தலை மகன்)

பங்களா தேஷ், பாகிஸ்தான் நண்பர்களைப் பற்றிக் கவலை இல்லை. மிஸ்டர் அப்துல்லா மனைவி மிஸஸ் அப்துல்லாதான். என்ன, நம் ஊரில் உள்ள பழக்கம் மாதிரி விஸ்வேஸ்வரைய்யாகாரு, மாதவ ராவ் சிந்தியா, பொட்டி சிவராமுலுகாரு, சுபாஷ் பாபு என்பதைப் போலக் கொஞ்சம் மரியாதை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரிஃப் சாகேப், பேகம் சாகிபென்றும், இளையவர்களை Bhai”, பெண்களை Apa (சகோதரி) என்றும் அழைத்துக் கொள்ளலாம். சிலர் கூடுதல் மரியாதையாக ஓட்டுநரைக் கூட ட்ரைவர் சாகேப் என்பார்கள்.

பல நாடுகளின் கலாச்சாரங்களை அவர்களுடன் பழகியும், கேட்டும், படித்தும் இருக்கிறேன். ஆனால் தல, தளபதி, புரட்சித் தலைவி, கேப்டன் என்பதெல்லாம் நம் ஊரில் ரொம்ப ஓவர்!

 

அழைப்பது
பாண்டித்துரை + 65 82377006
ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341

மலேசியாவில் ‘‘Obedient wives club” தொடங்கப்பட்டிருக்கும் செய்தி பலரைப் போலவே எனக்கும் வியப்பளித்தது. சென்றவாரம் சிங்கப்பூரிலும் அதன் கிளை தொடங்கப்படும் என்று டாக்டர் Dalan zaini  என்பவர் ஹமிதா, அஜிமின் இருவருடன் பேட்டி அளித்திருந்தார். கீழ்படியும் மனைவிகள் சங்கத்தின் முக்கிய கொள்கைப் பிரகடனம், சமுதாயத்தின் ஒட்டுமொத்த சீரழிவுக்கு முழுமுதற்காரணம். பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் பணிவாக நடந்து கொள்ளாதது, குடும்பத்தில் கணவனிடம் முதல் தர விபச்சாரியாக மனைவிகள் நடந்துகொண்டால் சமூகத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பதைப் பேட்டி காணும் அனைத்துப் பத்திரிகைகளிலும், ரேடியோ, தொலைக்காட்சி நேர்காணல்களிலும் தொடர்ந்து சொன்னார்கள்.

1968ல் அஸாரி முஹம்மது என்பவர் தினமும் தான் இறைத்தூதர் நபிகளைச் சந்திப்பதாகவும் இமாம் மஹதி விரைவில் தன் மறைவிடத்திலிருந்து தோன்றி உலகில் மறுமலர்ச்சியைக் கொண்டு வரப்போவதாகவும் பெண்கள் தங்களுடைய பணிவிடையை மேன்மைப்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை உயர்த்தவேண்டும் என்றும் ஆண்களிடம் மஹர் பெறுவதின் மூலம் பெண்களின் உரிமை முழுவதும் ஆண்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதை மீறினால் mushuz (Rebellion)  மலக்குகளின் கோபப்பார்வை குடும்பத்தைத் தாக்கும் என்றும் பிரகடனப்படுத்தி 1980&90களில் மலேசியாவில் சுமார் 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 2009ல் இவரது மனைவிகளில் ஒருவர் பலதாரம் புரிவோர் (Poly gamy club)சங்கத்தை ஏற்படுத்தினார். சென்றவருடம் தனது 73வது வயதில் இவர் இறக்கும்போது பல மனைவிகள், 40 குழந்தைகள் 200 பேரக் குழந்தைகள் இருந்தனர், அத்தோடு அவருக்கு 300 மில்லியன் சொத்தும் இருந்ததாம். இவர் சிங்கப்பூருக்குள் நுழைய தடை இருந்தது. 28 மில்லியன் மலாய் மக்களின் இந்த Gobel Ikhwan அமைப்பின் உதவி தலைவி ரொஹையா கீழ்படியும் மனைவிகள் உலக நன்மையைக் கையிலெடுக்கிறார்கள். விவாகரத்து, குடும்ப வன்முறை, விபச்சாரம் என்ற பேச்சுக்கே இனிமேல் இடமிருக்காது என்றும் கணவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வகுப்புக்களை மலேசியாவெங்கும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் சொல்கிறார். சிங்கப்பூரில் கிளை ஆரம்பிக்கவிருக்கும் டாக்டர் Darlan கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடப்பது இலதா Ibadah (Blessed derd in Islam) என்கிறார். கணவன் விரும்பினால் மனைவி உடலுறவை மறுக்கக்கூடாது. அது அவர்களுடைய உரிமை அல்ல என்றும் கூறுகிறார். கோலாலம்பூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த சங்கம் ஜோர்டான், இந்தோனேஷியாவிலும் கிளை பரப்பியுள்ளது.

சிங்கப்பூரில் அதிகாரபூர்வமான முயிஸ் அமைப்பு ஒட்டுமொத்தமாக இவர்களின் வியாக்கியானங்களை மறுத்து இது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்று அறிவித்துள்ளது

உடனே Dr. Darlan  “நாங்கள் வேண்டுமானால் கீழ்படியும் மனைவிகள் என்றிருப்பதை ‘‘மகிழ்ச்சியான குடும்பத்திற்கான வழி’’ என்று பெயர் மாற்றிக் கொள்கிறோம்” என்கிறார்.

நல்ல சமையல்காரி, நல்ல தாய், கீழ்படியும் மனைவி என்று கோஷத்தை முன் வைக்கும் இவர்களது பழமைவாதம் குறித்த விஷயங்களை அல்லாமா இக்பால் பல கவிதைகளில் விளக்கமாகவும் அழுத்தமாகவும் வடித்துள்ளார். சமூக நடவடிக்கையில் இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம வாய்ப்புக்களை வழங்குகிறது. பெண்மைக்கு அளிக்கும் பெருமையே சமுதாய வளர்ச்சிக்குத் தூண்டுதல் என்றார்.

‘அஸ்ரால் ஒராமுல்’ கவிதைப் படைப்பில்

ஆணின் நிர்வாணத்தை

ஆடையாய் மறைப்பவள் பெண்

அழகிய இதயத்துக்கான ஆடையை

அன்பினால் தருபவன் ஆண் என்கிறார்.

அவர் சமயம் சாராத கோட்பாடுகளை இஸ்லாமியத்துடன் ஒப்பீடு செய்வதிலும், இஸ்லாத்திற்கு இசைவாக அவற்றை எடுத்துச் செல்வதிலும், இஸ்லாத்திற்கு இசைவாக அவற்றை எடுத்து செல்வதிலும் முன்னேற்றமான எண்ணங்களின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தவர்.

OWC அமைப்பு தெரிவித்திருக்கும், தவ்ஹீத் மஹர், முஸ்குஸ் போன்ற சொற்களுக்குச் சரியான விளக்கம் பெற எண்ணி இமாம் ரஹ்மான் என்ற ஓய்வுபெற்ற பேராசிரியர் தற்போது பகுதி நேரமாக மதரஸாக்களில் சமயப் பாடங்கள் நடத்தி வருகிறார். சனி, ஞாயிறு தவிர அவரைச் சந்திக்கமுடியாது. இந்த நாட்களில் எங்கும் கடையை விட்டு நகரமுடியாது.

சென்றவாரம் அவரிடம் இந்த அமைப்பு பற்றி விளக்கம் கேட்டு தொடர்ந்து தொலைபேசி தொடர்பு கொண்டேன். அவர் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் Kecia Aliயின் ‘‘Marriage and Slavery in early Islam” அல்லது தாலித் அபு எழுதிய God’s name, Islamic law Authority and woman என்று இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்து படித்துப் பார்க்கச் சொன்னார்.

நான் இந்த வாரம் உயிரோசையில் இந்த சூடான விஷயத்தை வலையேற்றிவிட வேண்டும் என்ற ஆவலில் கேள்விகளைத் தயார் பண்ணிக்கொண்டு போனிலேயே உரையாட நேரம் கேட்டு ஆளைப் பிடித்துவிட்டேன்.

மலாயில் Taat என்றால் கீழ்படிதல் என்று பொருள்taat isteri kepoda swami (a wife’s obedience to her husbend) என்பதைப் பெயராக வைத்து இந்த வார்த்தை மனைவிகள் கீழ்ப்படிவதற்கானது என்று விளக்கம் சொல்வதை அவர் மறுத்தார். இஸ்லாத்தில் கீழ்படிதல் என்பது இறைவனுக்கு மட்டுந்தான்.

பெண்களின் பணிவு கணவன் மூலம் இறைவனுக்குச் சேர்வதாக தவ்ஹீத் (tawherd) என்பதே தவறு என்றார் அமைப்புக்கள் வெவ்வேறு நோக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. சமயத்தின் பழமையையும் பொற்கால உணர்வுகளயும் மீட்சிக்குள்ளாக்கும் நோக்கில் இயக்க நடவடிக்கைகளை சமயத்தின் சில விதிமுறைகளை முதன்மை நிலைக்குக் கொண்டுவந்து உண்மையான பிரதிகளைப் புறந்தள்ளிவிட்டு அந்த இயக்கங்களின் இலட்சியங்களுக்கு ஏற்றதாக வடிவமைத்துக் கொள்கிறார்கள்.

இது வரலாறு முழுக்க நிகழ்ந்து வருகிறது. அவர்களின் இலட்சியங்கள் சாத்தியமாகாதபோது சமய உட்பிரிவுகளோ அல்லது புதிய சமயமோ உருவாகலாம். இப்படிப்பட்ட கருத்துருவாக்கங்களை எல்லா சமயங்களுமே சந்திக்கின்றன என்றார்.

ஆணும் பெண்ணும் சமத்துவ அந்தஸ்து பெற்றிருப்பது பற்றிய கருத்துக்கள், இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கூடி வேலை செய்தல், தமது தேவைகள் பற்றிய பரஸ்பர பரிந்துணர்வு குர் ஆரில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றிலிருந்து சில இடங்களில் ஆண்களை விட மேலான நிலைக்கு உயர்ந்த கதைகள் நிறைய உள்ளன. சலீமாக்களின் காலத்தின்போதே கலிபா அல் முக்ததிர் அவரது தாயை உயர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தலைவியாக நியமித்தது படித்திருக்கிறீர்களா என்று கேட்டு விட்டு,

நபிகளின் வாழ்வு கூறும் உண்மை ஆன்மீகமா, உலகியலா என்பதைவிட அவர்கள் மனிதனாய் வாழ்ந்து உலகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் வழியைக் காட்டினார்கள். பெண்களின் சமத்துவத்துக்கு அவர்கள் வாழ்வே சாட்சி என்றவர்.

OWC அமைப்பிற்குப் பல மில்லியன் சொத்துக்களும், மெக்காவில் 20 அறைகள் கொண்ட வில்லாவும் இருக்கின்றன. அவைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா? என்று சொல்லி முடித்தார்

 thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4497

நண்பர் ஜலால் அடிக்கடி விமானப் பயணம் செய்பவர். இருந்தாலும் அவர் அமெரிக்கா போகிறேன் என்று சொன்னவுடன் அவர் பயணத் திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் திரில்லான ஆர்வம் எனக்குத் தொற்றிக்கொண்டது. நாள் நெருங்க நெருங்க அவர் மறந்திருந்தாலும் பயண ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். தொடர்ந்து 18 மணிநேரம் பயணம். சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்குச் சென்று டிரான்ஸிட் பிளைட் எடுத்து லாஸ் ஏன்ஜெல்ஸ், பிறகு லாஸ் வேகாஸ்க்கு உள்நாட்டு விமானத்தைப் பிடிக்கவேண்டும். அதனால் அவருக்கு ஜெட்லாக் (Jet lag) ஜெட் தளர்ச்சி வந்துவிடுமோ என்று பயம். அவர் ஒரு பிராக்டிகலான ஆசாமி. இரண்டுநாட்கள் உடம்பை அதற்கேற்றவாறு தயார் செய்ய ஆரம்பித்தார். மஸாஜ், பிசியோதெரபி என்று புகுந்துவிட்டார்.

இந்த ஜெட்லாக் என்பது ஒரு கால மண்டலத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்லும்போது ஏற்படும் உயிரியல் ஒருங்கமைப்பு விசயம். இரவு, பகல் சுழற்சிக்கேற்ப இசைவடையாமல் உடம்பு எதிர்கொள்ளும் காலதாமதத்தால் ஏற்படும் சோர்வு என்கிறார்கள். அத்துடன் தற்போது விமான நிலையப் பாதுகாப்பு சோதனைகளைக் கடப்பதற்கு டிராவல் எக்ஸ்பர்ட் கன்ஸல்டன்ஸ் வந்துவிட்டார்கள். சிக்காகோ சென்று கொண்டிருந்த விமானத்தில் நைஜீரியர் உள்ளாடைக்குள் வெடிமருந்து வைத்த நிகழ்விற்குப் பிறகு பயணிகளிடம் உள்ளாடைக்குள்ளும் நுழைந்து சோதனை செய்வதற்குப் பாதுகாப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளனவாம். நீங்கள் கைபடாமல் பாதுகாப்பு சோதனையிலிருந்து வெளியேற சட்டையில் உலோகத்திலான பித்தான்கள், பெண்கள் உள்ளாடைகளின் ஓரத்தில் வயர் இல்லாமலும் உடை அணிந்து கொள்வது உத்தமம்.

விமானப் பயணிகள் திரில்லிங்காகவும் குதூகலமாகவும் இருந்த காலங்கள் மலையேறிவிட்டன. சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வருபவர்களை மாதக்கணக்காக பயணம் எப்போது வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கும் பழக்கம் பழசாகிவிட்டது. அதேபோல் விமானப் பயணங்களுக்கென்று பிரத்யேக உடைகள் அணிவதும் குறைந்துகொண்டே வருகிறது. சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் பாதிக்கு மேல் இப்போது பெர்முடாஸில் விமானம் ஏறுகிறார்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருக்கும் சிங்கப்பூர் நண்பர் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் ஜாக்கிங் செல்ல ஏதுவாக ஜாக்கிங் கேன்வாசுடன் இங்கிருந்து விமானம் ஏறுவதாகச் சொன்னார். ஜெட்லாக்கை சமாளிக்க சிலர் மெலமைன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு மாற்றாக இது light தெரபி என்றார் (நிறைய பயண அனுபவமுள்ளவர். சரியாகத்தான் இருக்குமோ).

1963ல் ‘VIP’ என்று ஒரு ஹாலிவுட் படத்தில் ரிச்சர்ட் பர்ட்டனும், எலிசபெத் டெய்லரும் லண்டன் ஏர்போர்ட்டில் விமானம் கோளாறாகிக் காத்திருக்கும் கதையே அந்தக் காலத்தில் பெரிய ஹிட் கொடுத்ததாம்.

1970களில் ‘ஏர்போர்ட்’, ‘ஏர்போர்ட் 75’, ‘ஏர்போர்ட் 77’, ‘கன்கார்டு 79’ என்று வரிசையாக வந்து திரில்லிங் கொடுத்தன. 2005ல் ‘தி டெர்மினேட்டர்’ மற்றும் கொரியப்படம் ‘ரெட் ஐ’, ‘ஸ்நேக்ஸ் ஆன் தி பிளேன்’ படங்களோடு விமானக் கடத்தல் மற்றும் அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் குறைந்துவிட்டன.விதவிதமான கதைகளைச் சொல்லி தீவிரவாதிகளுக்கு இவர்கள்தான் கதைத் தீனி போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

நடிகர் சுருளிராஜன் 1980ல் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடிகர் விஜயனுடன் தாமன்ஜீராங்கில் உள்ள என் தந்தையார் கடைக்கு வந்தபோது சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் கொடுத்த டாடி பெர்ப்யூம் மற்றும் விஸ்கி சாப்பாடு பற்றி சென்னை திரும்பும்வரை சிலாகித்துப் பேசிக்கொண்டே இருந்தாராம்.அப்படிக் கொடுப்பதெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. பட்ஜெட் ஏர்லைன்ஸ்களில் வெறும் ஆம்லெட்டை மட்டும் வைத்து மதிய உணவு கொடுக்கிறார்கள். சமீபத்தில் ஓர் ஆய்வில் ஜெட் இன்ஜின் சப்தம் சுவை நரம்புகளை மழுங்கடிக்கச் செய்வதால் பறந்து கொண்டிருக்கும்போது நாக்கின் ருசி பற்றி வாயைத் திறக்காதீர்கள் என்கிறார்கள்.

 தாய்லாந்து புக்கெட் தீவுகளுக்குச் சென்றுவிட்டு சில்க் ஏர் விமானத்தில் சிங்கப்பூர் திரும்பும்போது குளிர்தாங்காமல் என் நண்பர் K ஓவர் கோட் போட்டுக்கொண்டு வந்தார். செக்யூரிட்டி செக்கில் நிறுத்தி கோட்டைக் கழற்றச் சொன்னார்கள். அப்படியெல்லாம் கழற்ற முடியாது என்கிற மாதிரி நின்று கொண்டிருந்தவரை ரூமுக்குள் நெட்டித் தள்ளிக் கொண்டு சென்று திரும்ப கொண்டுவந்துவிட்டார்கள். கோட்டைக் கழற்ற வேண்டியதுதானே என்று கேட்டோம். உள்ளே ஸ்லீவ்லெஸ் மினிகோட் அணிவதற்குப் பதில் முண்டா பணியனைப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.

மோசமான வானிலை, என்ஜின் கோளாறு என்ற காரணங்கள் 9/11 க்குப் பிறகு பெரிய மாற்றம் கண்டுவிட்டது. கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் லேமனிலிருந்து அனுப்பப்பட்ட Fedex பார்சல் வெடிகுண்டு நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. ஓர்லேண்டோ ப்ளோரிடா விமான நிலையத்தில் TSA (Trasnport securtity administration officer) 8 வயது சிறுவனை சட்டையைக் கழற்றி சோதனை செய்திருக்கிறார்கள். விமானத்தில் ஏறுவதற்கு அழகாக டிரஸ் பண்ணிக்கொண்டு வந்திருந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ந்து விட்டார்களாம். பிள்ளைகளைத் தொட்டு விளையாடுவதற்கு அப்பா அம்மாவுக்கு அடுத்தபடி TSAக்கும் உரிமை உண்டு என்று முக்கிய பாடமாகச் சொல்லி வைக்கலாம். ஆனாலும் சில நேரங்களில் இந்த மாதிரி பாடங்களைத் தீவிரவாதிகள், முன்னாலேயே படித்துத் தேர்ந்துவிடுகிறார்கள்.

சென்ற வருடம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து திரும்பும்போது நண்பன் சம்சுவும் நானும் பழங்கள் வாங்கி ஆளுக்கு இரண்டு கூடை பேக்செய்தோம். என் கூடைகளில் நெல்லிக்காய், நாவல்பழம், சீத்தாப்பழம் இருந்தன. சம்சு காய்கறிகளை மட்டும் இரண்டு கூடைகளில் பேக் செய்துவிட்டார். சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட்டில் ஒரு கூடை மட்டும் சுற்றிக்கொண்டிருந்தது. எனக்கும் முன்னதாக நண்பர் சென்றுவிட்டார். பயணிகள் வெளியேறும் வரை காத்திருந்து ஏர்போர்ட் லக்கேஜ் டேக்கை கொடுத்துக் கூடை காணாமல்போன விபரங்களைச் சொன்னேன். அப்படி எந்தக் கூடையும் இல்லை என்றார்கள். அடுத்தநாள் வந்தால் கேமரா பார்த்துவிட்டுச் சொல்வதாகச் சொன்னார்கள். அங்கு அதிகமாக மறந்து விட்டுப்போன சமாச்சாரங்களில் லேப்டாப், செல்போன், மூக்குக் கண்ணாடி இவற்றுடன் பல் செட்டுகளும் இருந்தன.

 சமீபத்தில் சிங்கப்பூரில் புகழ்பெற்ற வக்கீல் தீபாவளிக்கு ஸ்வீட் எடுத்து வந்திருக்கிறார், அட்டைப்பெட்டி காணாமல்போய்விட்டது. பெட்டியை அன்றே கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் அதற்குள்ளிருந்த ஸ்வீட்டை யாரோ காலிபண்ணிவிட்டார்கள். விசயம் கோர்ட் படியேறி வெளியே ஒரு தொகை கொடுத்து விமான நிறுவனம் செட்டில் பண்ணியது. வக்கீல் அந்த ஸ்வீட்டான தொகையை சிண்டாவுக்கு (இந்தியர் நலச் சங்கம்) நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.

என் பழக்கூடையைப் பத்திரமாக சம்சு எடுத்துப்போய்விட்டான். “அல்லாம்மா, வண்டி வந்துவிட்டது. உன்னை காணோம்லா. உன் கூடையை நான் எடுத்துவந்துவிட்டேன். நெல்லிக்காய் சரியான புளிப்பு” என்றான், நான் சொன்னேன், “தண்ணீர் குடி இனிக்கும்” என்று (எரிச்சலுடன்). சமீபத்தில் ஒரு செய்தி, ஹாங்ஹாங்கில் விமானத்தில் ஏறிய வயதான வெள்ளைக்காரர் வான்கோவரில் இறங்கும்போது சீன இளைஞராக மாறிவிட்டிருந்தாராம் (ஆள் மாறாட்டம்). சிங்கப்பூரர் ஒருவர் தன்னுடைய மகன் கடவுச் சீட்டில் தவறாகப் பயணம் செய்து ஹாங்ஹாங்கில் இறங்கும் போதுதான் கவனித்தாராம், தன்னுடைய பாஸ்போர்ட் வீட்டில் பத்திரமாக இருப்பதை. மேய்ப்பர்கள் இருந்தும் ஏமாற்றிச் செல்லும் ஆடுகள்.

 பட்ஜெட் ஏர்லைனில் பயணம் கொஞ்ச மிஞ்சமிருந்த திரில்லிங்கையும் குறைத்துவிட்டது. Ryan air நின்றுகொண்டே பயணம் செய்யும் வகையில் விமானங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது (குறுகிய தூரங்களுக்கு). கை லக்கேஜ் எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. Air Newziland லாஸ் ஏன்ஜெல்ஸ் மற்றும் லண்டன் விமானங்களில் ஜோடிகள் தங்களுடைய இருக்கைகளைப் படுக்கை வசத்தில் மாற்றிக் கொள்ளும் விதமாக (Sky couches ) வரும் ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் காலியாக இருக்கும் இருக்கைகளை நிரப்புவதாக நினைத்துக்கொண்டு ஜோடிகளை மாற்றிப் படுக்கவைத்துவிட்டால் விமானப் பயணங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன (சும்மா ஒரு கற்பனை). அதுவரை நீங்கள் சீட் பெல்டைக் கட்டிக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கழிவறைக்கு யாராவது அதுவும் காலைச் சொறிந்து விட்டுச் செல்கிறார்களா என்பதைக் கவனித்துக் கொண்டு பயணம் செய்தால் போதுமானது.

     

thanks:http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3732