கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் இடுப்பில் ஒரு கத்தியும், தலையில் மானெக்ஷா தொப்பியும்அணிந்து கொண்டு, தன்னுடையகையிலுள்ள தடியால் இரண்டுதட்டுத் தட்டிக் கடைக்காரரைத்தன் பக்கம் திரும்ப வைத்து, “அரே சாப்“என்று ஒரு சல்யூட்அடித்துக் கொண்டே செல்லும்கூர்க்காவின் பிம்பம் இன்னும்என் மனதில் அழியாமல் இருக்கிறது.தன் குடும்பத்தையும், குழந்தைகளையும், சொந்த ஊரையும் விட்டு வந்து, இரவெல்லாம் விழித்திருந்து, கிடைக்கும் பகல் நேரங்களில்தூங்கி விழிக்கும் கூர்க்காக்களின்தேர்ந்த உடற்கட்டும், இறுக்கமானபார்வையும், தன்மையான மனமும், மீசையில்லாத முகமும் மறக்கமுடியாதவை.
கல்லூரியில்படிக்கும் போது, கூர்க்காக்களுக்குஅதிகமாக முடிகள் ஏன் வளர்வதில்லைஎன்பதில் ஆரம்பித்த அரட்டை, கூர்க்காவாக நடித்த சத்தியராஜுக்கு எப்படி கூர்க்காவேடம் பொருந்தும் என்பதில்முடிந்திருக்கிறது. அவரை விடக்கூர்க்கா வேடத்துக்கு மம்முட்டிதான்சரியான தேர்வு என்று தோன்றும்.
“விடிந்து விடு இரவே
விழித்திருக்கிறான் கூர்க்கா“
என்ற அறிவுமதியின் கவிதையும், ’கூர்க்காவின்பகல் பொழுது’என்ற எஸ்.ராவின்பத்தியும் சிங்கப்பூர் கூர்க்காக்களுக்குஎப்படிப் பொருத்தமில்லாமல்போனது என்பதைப் பற்றியதுதான்இந்தப் பத்தி.
ஐந்துவருடங்களுக்கு முன்பு கூர்க்காக்கள் குடியமர்த்தப்பட்டிருக்கும்ஜி–செங் பகுதியில் உணவுக்கடை திறக்கும் வாய்ப்புவந்தது. கூர்க்காக்களின் தேசியஉணவு சப்பாத்தி. அத்துடன் ‘ரோட்டா’. இந்த காம்பினேஷன் எனக்கும்மிகவும் பிடித்துப் போய், தாமதம்செய்யாமல் கடையைத் திறந்தேன்.பிறகுதான் தெரிந்தது… கூர்க்காக்கள்சிங்கப்பூருக்கு சமீப காலத்தில்வந்தவர்கள் அல்ல – 1945லிருந்துஇங்கு இருக்கிறார்கள் என்பது!
பையா ‘சாதா வாலா, அண்டா வாலா’ (சாதாபடோட்டா, முட்டை பரோட்டா)என்றுநான் குரல் கொடுத்தால், “நோபையா! ஐ லைக் மீ சூப், சிக்கன்ரைஸ், எக்கனாமிக் மீகூன் என்றுநழுவுகிறார்கள். மலாயும், நுனிநாக்கு பிரிடிஷ் ஆங்கிலமும்வெளுத்துக் கட்டுகிறார்கள்.இவர்கள் இரவில் விழித்திருக்கும்கூர்க்காக்கள் அல்ல; பகல் நேரத்தில்சிங்கப்பூரின் மிக சென்சிடிவானபகுதிகளைப் பாதுகாக்கும்காவலர்கள்.
அதிகாலையிலும்மாலையிலும் உடற்பயிற்சிகள்–தனியாக அல்ல –குடும்பத்துடன்மேற்கொளுகிறார்கள். எந்நேரமும்இயங்கிக் கொண்டு, குழந்தைகளைக்கொஞ்சிக் குலாவி வளர்க்கிறார்கள்.இன்றைய இளைஞர்கள், இவர்களைப்பார்த்துத்தான் “ஹாட் பிராண்ட்“சட்டைகள், சூ, ஜாக்கெட் போன்றவற்றின்நவீன மோஸ்தர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்!
நாளதுதேதியில்,சுமார் 2000 கூர்க்காவீரர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார்கள்.அவரகளது குடும்ப உறுப்பினர்களியும்கணக்கில் எடுத்துக் கொண்டால்சுமார் 5000 பேர் Gurkhas’ campல் இருக்கிறார்கள்.
என்நினைவில் தேக்கி வைத்திருந்த ‘உம்’மென்ற கூர்க்காவை இங்கு பார்க்க முடியவில்லை. என்ன…பரோட்டாவை அந்நிய தேசத்துஉணவாக நினைத்துக் கொண்டு என்கடையில் சாப்பிடாததுதான்எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.
பத்திஎழுதுவதற்கு ஏதாவது விஷயத்தைக்கறக்கலாம் என்றால், நாம் வாயைத்திறந்து கேட்பதற்கு முன்னால்ஓட்டமெடுக்கிறார்கள். இந்நிலையில்நேபாளத்திலிருந்து ஓர் இளைஞர் கணிப் பொறித் துறையில் வேலைசெய்வதற்காக வந்து ஜீ–செங்கில்தங்கினார். மூன்று வேளையும்என் கடையில்தான் சாப்பாடு.எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.கொஞ்ச நாள் கழித்து அவருடன்ஒரு மலாய்க் காரப் பெண் உடன்வந்ததும்தான் எனக்கு விஷயம்புரிந்தது. இருவரும் கலப்புத்திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.
வயதுவந்த ஆணும் பெண்ணும் கலப்புத்திருமணம் செய்து கொள்ளுவதற்குசிங்கப்பூரில் எந்தவிதச்சமூகத் தடைகளையும் கடக்க வேண்டியதில்லை.நேபாள இளைஞர் தானாகவே முன்வந்து சுன்னத் செய்து கொண்டார்.அவர்களுடைய திருமணத்தின்சிறப்பு விருந்தினர்களில்நானும் ஒருவனானேன். வருகிறஆண்டு காத்மண்டுக்கு என்னைஅழைத்திருக்கிறார்கள்.
சுவாரசியமானவரலாற்றுப் பின்னணியையும் அவர்கள் நடைமுறை வாழ்க்கைபற்றியும் நேப்பாள இளைஞரிடம் பல தகவல்களைப் பெற முடிந்தது.
’நே’ என்றால் புனிதம் என்றும் ’பாள்’ என்றால் குகை என்றும் அர்த்தம். இந்த நேபாள் – புனிதக் குகையின் மைந்தர்களுக்குக் காவல் உழைப்புத்தான் சொத்து. பல்வேறு தொன்மங்களாலும் நம்பிக்கைகளாலும் புனிதப்படுத்தப்பட்ட விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டுதான் தங்களது வாழ்வை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லுகிறார்கள். பாரம்பரியமான பயிற்சி கொண்ட தனித் திறன் பெற்ற தொழிலாளர்கள் என்று உலகமெங்கும் இவர்கள் பெயர் பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் பணிபுரியும் எந்த ஒரு நாடும் (சிங்கப்பூர் உள்பட) இவர்களுக்கு நிரந்தர வாச உரிமையையோ குடி உரிமையையோ வழங்குவ தில்லை. சிங்கப்பூரில் 20 வயதிலிருந்து 45 வயது வரை பணிபுரிந்த பிறகு, ஓய்வு அளிக்கப்பட்டு நேப்பாளத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள். ஓய்வூதியம் மாதா மாதம் நேப்பாளத்துக்கே போய்ச் சேர்ந்து விடும். (2007ல் லண்டனில் கடுமையான சட்டப் போராட்ட்த்துக்குப் பிறகு குடியுரிமை வழங்கப்படுகிறது.)
Gurkha, Gorkha, Ghurkha என்று பலவிதமாக உச்சரிக்கப்படும் ‘கூர்க்கா’ நேப்பாளத்திலிருக்கும் ஒரு மாவட்டத்தின் பெயர். இவர்கள் கூர்க்கி என்ற கத்தியை வைத்திருப்பதால் காரணப் பெயராக ’கூர்க்காக’அமைந்தது என்றும் சொல்லுவார்கள்.
1559ல் லம்ஜூ ராஜ்ஜிய அரசரின் மகனாகிய டிராபியா ஷா என்பவரின் வம்சத்தில் வந்த பிரித்வி நாராயண ஷா என்பவர், இனத்தின் அடிப்படையில் தனக்கென ஒரு படையை அமைத்ததுதான் கூர்க்கா படையின் துவக்கம். 1812ல் 12,000 எண்ணிக்கையில் இருந்த கூர்க்கா படையை எதிக்க சுமார் 30,000 ஆங்கிலப் படை வீர்ர்கள் போரிட்டனர். உறுதியான எதிர்ப்பால் Gorkhalis என்று அப்போது அழைக்கப்பட்ட இவர்களிடம் தோற்ற ஆங்கிலப்படைத் தளபதி Federick young, சில காரணங்களால் பிரிந்திருந்த கூர்க்காக்களையே பிரிடிஷ் படையில் சேர்த்துக் கொண்டு போரிட முயன்ற போது, தன் இனத்தையே எதிர்க்கத் துணியாத கூர்க்காக்கள் படை, தளபதி Federick young ஐத் தனியே விட்டு விட்டு ஓட்டமெடுத்தது. சிறைப்பட்ட young கூர்க்காக்களின் வீரத்தையும் ஒற்றுமையையும் பிரிடிஷாரது கவனத்துக்குக் கொண்டு சென்று, கூர்க்காப் படை அணியை உருவாக்கினார்.
கடந்தநூறு ஆண்டுகளாக பிரிடிஷாருக்கும்காலனித்துவ நாடுகளுக்கும் காவல் பணியில் கூர்க்காக்கள்ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 1945லிருந்து இந்திய ராணுவத்தில்கூர்க்காப் படை அணி உருவானது.இரண்டு உலகப் போர்களிலும்சுமார் இரண்டு லட்சம் கூர்க்காக்கள்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 43,000 பேர் இறந்திருக்கிறார்கள்.
இவர்களில்குறிப்பிட்ட GURUNGS, MANGORS, RAIS, LIMBI என்ற நான்கு இனக் குழுக்களில்இருந்துதான் காவல் பணிக்குவருகிறார்கள். காத்மண்டுவிலுள்ள“பொக்காரோ“என்ற இடத்தில்இருந்து கூர்க்கா இளைஞர்கள்சிங்கப்பூர்ப் பணிக்குத்தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.அது Singapore Tole என்றழைக்கப் படுகிறது.ஆண்டு தோறும் 200 பணியிடங்களுக்கு, 20,000 பேர் வரை போட்டியிடுகிறார்கள்.கடினமான 70 கிலோ கல் நிரம்பியமூட்டையை முதுகில் சுமந்துகொண்டு 40 நிமிடங்களில் மலைப்பாதையில் ஏறி இறங்க வேண்டுமாம்.இங்கு வந்த பிறகு கடுமையானஒரு வருடப் பயிற்சிக்குப்பிறகு பணியில் சேர்கிறார்கள்.சிங்கப்பூரின் இன ஒற்றுமையில்இவர்களின் பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது.
1950ல் மலாய்க் குடும்பத்தில் எட்டு வருடங்களாக வளர்க்கப்பட்ட மரியா ஹெர்டோக் என்பவரை அவருடைய கத்தோலிக்கப் பெற்றோருடன் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, பெரிய அளவில் கலவரங்கள் வெடித்தன. அதே போல 1964ல் மீலாது விழா ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் சுமார் 36 பேர் கொல்லப்பட்டு, 500 பேர் காயமடைந்தனர். சிங்கப்பூரின் தந்தை Mr. லீ குவான்யூ “THIRD WORLD TO FIRST WORLD“ என்ற புத்தகத்தில், ‘மலாய் போலீஸ், சீனர்கள் மீதோ சீன போலீஸ், மலாய்க் காரர்கள் மீதோ துப்பாகிச் சூடு நடத்தும் போது அது வேறு பல பிரச்னைகளையும் சேர்த்துக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. அந்தச் சமயத்தில் கூர்க்காக்களின் பணி மிகவும் உதவிகரமானது’ என்கிறார்.
இவர்களின்வீரத்துக்குக் காரணம் ’ஜெய்மஹா காளி ஆயோ கூர்க்கா’என்றஇவர்களது முழக்கமா அல்லதுஇவர்களிடமிருக்கும் 18 அங்குலக்கூர்க்கிக் கத்தியா என்ற கேள்விக்கு‘இரண்டும்தான்’என்று பதிலளிகிறார்கள்சிலர். இந்த ஆண்டு ஜனவரியில்ராஞ்சியிலிருந்து கோரக்பூர்சென்று கொண்டிருந்த மௌரியாஎக்ஸ்பிரஸில் பயணம் செய்துகொண்டிருந்த ‘பின்னு சேஸ்த்தா’தன்னுடைய கூர்க்கிக் கத்தியுடன் 40 பேர்களுடன் போராடி சக பயணிகளையும் 18 வயது மாணவி ஒருவரையும் காப்பாற்றினார்.ஒரு கையால் ஒரு திருடனை மடக்கிப்பிடித்து வைத்துக் கொண்டுசண்டையிட வரும் மற்ற திருடர்களைக்கூர்க்கிக் கத்தியால் தாக்கி, 3 பேரைக் கொன்று, 8 பேரைக் காயப்படுத்தினார்.அவர் போட்ட ’ஜெய் காளி ஆயோகூர்க்கா’கோஷத்தால், நிறையக்கூர்க்காக்கள் இருப்பதாகமற்ற திருடர்கள் நினைத்துஓட்டமெடுத்தார்களாம்.
2001ல் இளவரசர் திபேந்திரா தனது மணப் பெண் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெறியாட்டம் ஆடியதில் நேப்பாளிகளின் அறம் கொஞ்சம் ஆட்டம் கண்டது.
ஆனால்சமரசம் செய்து கொள்ளாத காவல் பணியில் சிறந்தவர்கள் என்பதால்உலகின் முக்கியமான தலைவர்களுக்குக் காவல் பணியில் கூர்க்காக்கள்தான் அமர்த்தப்படுகிறார்கள். ஆஃப்கானிஸ்தானத்தில்போர்க்களம் கண்ட இளவரசர் ஹாரி, 10 வாரங்கள் கூர்க்கா படைகளுடன்தங்க வைக்கப்பட்டிருந்துதானும் போர் செய்த்தாகக் கூறிக்கொண்டார்.
1971ல் இந்தியா – பாகிஸ்தான் போரின் வீரத் தளபதி ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா ஒரு முறை சொன்னார்.
“சாவதற்குப் பயப்பட மாட்டேன் என்ரு யாராவது சொன்னால்
அதுபொய்யாக இருக்க வேண்டும்; அல்லது அதைச் சொல்லியவர்
ஒரு கூர்க்காவாக இருக்க வேண்டும்“
மானெக்ஷாஊட்டியில்காலமானபோதுஅரசியல்தலைவர்கள்யாரும்ஈமச்சடங்குகளில்கலந்துகொள்ளவரவில்லை. ஆனால்அவர்விரும்பியகூர்க்காப்பாதுகாப்புப்படைவீர்ர்கடைசிவரைகூடவேஇருந்தார்.