ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341
கடந்த ஞாயிறு ‘03.10.2010’ அன்று சிங்கப்பூரில் புதிய இணைய இதழ் ‘தங்கமீன்’ துவக்கி வைக்கப்பட்டது.
விழா கச்சிதமாக நடந்தது. திரு விசயபாரதி விழாவை வழிநடத்தினார், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது நிகழ்வு 10 நிமிட தாமதத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது பேச்சாளர்களின் நேரத்தை ஒட்டி அறிவிப்பு செய்தது ரசிக்கும்படி இருந்தது. எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் பேசும்போது விக்கிபீடியாவில் குறைந்த மக்களே பேசக்கூடிய மொழிக் கட்டுரைகளை ஒப்பு நோக்க தமிழில் கட்டுரைகள் குறைவாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றார். திரு சுப. திண்ணப்பன் விண்மீன் கடல்மீன் தரையில் தங்கமீன் என்று வர்ணித்து, இந்த தங்கமீன் மனதில் தங்கவேண்டும் என்றார். திரு அழகியபாண்டியன் அதிகப்படியான உள்ளடக்கங்களை தொடர்ந்து கட்டிக்காக்க இயலுமா என்று கேள்வி எழுப்பித் தொடர்ந்து பாலுமணிமாறன் கட்டிகாப்பார் என்றார். திரு.செ.ப.பன்னீர்செல்வம் இணைய பத்திரிகை ஆரம்பிக்க தகுந்த சூழல் சிங்கப்பூரில் இருந்தபோதும் இதோ அதோ என்று சொன்னார்கள். ஓரான் லாவா ச்ககாப் சக்கப் தற்போது பாலு அதை நிறைவேற்றிக் காட்டிவிட்டார். நம் சந்ததிகளுக்கு நாம் எதையாவது கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் சரிதானே என்றார். திரு ஜோதிமாணிக்கவாசகம் வாள்முனையை விட பேனா முனை கூர்மையானது என்று சொல்வார்கள் இப்போது எலியின் சிணுங்கல் அதைவிடக் கூர்மையாகிவிட்டது என்றார். திரு.ராம.கண்ணபிரான், ரத்தினசபாபதி, சபா ராஜேந்திரன் மற்றும் தொலைக்காட்சி நடிகர் மதியழகன், நல்லு தினகரன் ஆகியோர் வாழத்திப்பேசினர்.
சிறப்புரை ஆற்றிய திரு அருண்மகிழ்நன் -கொள்கை ஆய்வுக் கழகத் தலைவர்- தன்னுடைய 10 வருடக் கனவை திரு.பாலுமணிமாறன் நிறைவேற்றி விட்டதாகச் சொன்னார். குழுக்களுக்குள்ளும் உள் வட்டங்களிலும் இதை அடக்கி விடாமல் சிங்கப்பூரிலுள்ள பல ஊடகங்களின் செயல்பாட்டுத் தளமாக இது விளங்க வேண்டும் என்றார்.
தனக்கும் 10 வருடக் கனவு இது என்ற எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், அருண் மகிழ்நன் இருவரும் இணைய இதழை துவக்கிவைத்தனர்.
சிங்கப்பூர் ஊடகங்களில் கேளிக்கைகளுக்கும் நுகர்ப் பொருட்களின் மீதான வேட்கைக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்று http://www.thangameen.com கிளிக் செய்யக் கூட்டத்தினர் ஆர்வத்துடன் பரபரத்தார்கள்.
வழக்கம்போல திரு சாரு அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினையுடன், ‘தங்கமீன்’ சிணுங்க ஆரம்பித்துவிட்டது.
http://thangameen.com/ContentDetails.aspx?tid=39
thanks:தங்கமீன்.com & உயிரோசை.com
‘எனக்குள் இருப்பவள்’
‘வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்’
‘மனிதர்கள் மத்தியில்’
‘சந்தியா’
‘சுகபோக தீவுகள்’
‘பூக்களை மிதிப்பவர்கள்’
‘குமாரசாமியின் பகல்பொழுது’
கதை சொல்வது மாதிரி இருக்கிறதல்லவா…
சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளில் முத்திரை பதித்த பிரபஞ்சனின் படைப்புகள்தான் இவைகள்.
தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரை சிறந்த எழுத்தாளர் என்று கௌரவித்துள்ளது.
என்னற்ற இலக்கிய மரியாதை பெற்றவர்.
அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திர படைப்பு, மனித நேயத்தை உன்னதப்படுத்தும் லட்சியம் இவரது எழுத்தின் சிறப்பு…
மனித சுபாவம் எல்லா எல்லா காலங்களிலும். எல்லா தேசத்துக்கும் இலக்கியத்தின் கருப்பொருளாக இருந்து வருவதை பார்க்கிறோம். உருவம், யுக்திகள் மாறலாம். இது மட்டும் மாறுவதில்லை. மனித சுபாவத்தில் இத்தனை சுழிப்புகள் இருப்பதாலோ என்னவோ, இத்தனை காதல் இத்தனை காரியங்கள் இங்கு சாத்தியமாகின்றன.
பல ஆயிரம் மைல்களை கடந்து வந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலேயே பிறந்த தமிழனுக்குள்ளும் செயல்பட்ட மனித சுபாவத்தை உடைத்துப் பார்த்த இவரது நாவல் ”வானம் வசப்படும்” சாகித்திய அகடாமி பரிசு பெற்றது.
சிறுகதைகள், நாவல்களும் ஒரு அனுபவத்துளி மட்டுமல்ல அது ஒரு முழு வாழ்வின் சிறு துளி. அதில் கூறப்பட்ட தளங்களுக்குள்ளே ஒரு முழு வாழ்வை நம் நினைவில் விரித்துக்கொள்ள முடிந்த எழுத்துக்கள் பிரபஞ்சனுடையவை…
வாருங்கள் …
எதிர்வரும் வெள்ளி (23.04.2010) மாலை 6.30மணிக்கு தேசிய நூலகத்திலும்
திங்கள் (26.04.2010) மாலை 7.00மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்திலும்
பிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் நினைவுகளை நிரப்பிக்கொள்ள…
அப்துல்காதர் ஷாநவாஸ்